அதிமுக இரு அணிகளும் இணையாமல் இருக்க பாஜக தான் காரணம் - தாக்கும் தமிமூன் அன்சாரி: வீடியோ
அதிமுக இரண்டாக பிளவடைவதற்கும் ஒன்று சேராமல் இருப்பதற்கும் பாஜக மட்டுமே காரணம் என தமிமூன் அன்சாரி என்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு: அதிமுக இரண்டாக பிளவடைவதற்கும் மீண்டும் ஒன்று சேராமல் இருப்பதற்கும் பாஜக தான் காரணம் என மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளரும் எல்.எல்.ஏவுமான தமிமூன் அன்சாரி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளரும் எல்.எல்.ஏவுமான தமிமூன் அன்சாரி,''வருமான வரித்துறை பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறது. அதிமுக இரண்டாக பிளவுபடுவதற்கு பாஜகவின் கைங்கர்யம் தான் காரணம்.

பிளவுபட்ட அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணையாமல் தடுத்து வருவது பாஜக தான். அதிமுகவை மத்தியில் ஆளும் பாஜக தான் சிதைத்து வருகிறது'' என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ தற்போது ஈபிஎஸ் அணியில் இருந்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் ஈபிஎஸ் அணி ஆதரவு வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு எதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications