'ஹாய் டிரைவர் .. ஹவ் ஆர் யூ'.. பேருந்து கண்ணாடியை உரசியபடி நின்ற யானைகள்.. பீதியில் உறைந்த பயணிகள்!
சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் பெண் யானை ஒன்று, தனது குட்டியுடன் அரசு பேருந்தை வழிமறித்து நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.
Recommended Video
இந்த காட்டு யானைகள் தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம்.

சத்தியமங்கலம்
இந்த நிலையில் இன்று அரசுப்பேருந்து ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலம் சென்றது. அந்த பேருந்து சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது.

குட்டியுடன் வந்த யானை
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை ஒன்று, தனது குட்டியுடன் தேசிய நெடுஞ்சாலையில் ஜாலியாக நடந்து வந்தது. திடீரென காட்டு யானை குட்டியுடன் வருவதை கண்ட வாகன ஓட்டிகள் யானையைக் கண்டு அஞ்சியபடி வாகனங்களை அடுத்தது நிறுத்தினார்கள் இதேபோல் சத்திய மங்கலம் நோக்கி சென்ற பேருந்தும் நிறுத்தப்பட்டது.

கண்ணாடியை உரசியது
ஆனால் தாய் யானையும், அந்த குட்டி யானையும் வாகனங்களை பற்றி கவலைப்படாமல் ஜாலியாக அரசு பேருந்தை நோக்கி வந்தது. இதனை தொடர்ந்து அந்த காட்டு யானை பேருந்தின் முன்புறம் நின்றபடி தனது தும்பிக்கையால் கண்ணாடியை உரசியது. யானை பேருந்தின் முன்பு நின்றபடி கண்ணாடியில் உரசுவதை கண்ட பேருந்தில் உள்ளே இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.

''கணேசா கணேசா''
பீதியில் உறைந்த பயணிகள் ''கணேசா கணேசா'' என யானையை கும்பிட்டனர். சிலர் அதனை உள்ளே இருந்து விரட்ட முயன்றனர். இதைத்தொடர்ந்து காட்டு யானை பேருந்தில் முன் புறத்தில் இருந்து விலகி ஓரமாக பேருந்தை கடந்து சென்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதியடைந்தனர். இதைத்தொடர்ந்து பேருந்து புறப்பட்டு சென்றது. அங்கு நின்று கொண்டிருந்த மற்ற வாகனங்களும் புறப்பட்டு சென்றன.

வனத்துறையினர் அறிவுறுத்தல்
வனப்பகுதி என்பதால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் செல்லும் விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் வாகன ஓட்டிகள் சிலர் விலங்குகளை தொடர்ந்து தொந்தரவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications