வெள்ளத்தில் சிக்கித் தவித்த சென்னையில்... 5000 கிளிகளுக்கு புகலிடம் தந்த பறவை மனிதர்
சென்னை: பறவை மனிதன் என்று இவருக்குச் செல்லப் பெயர் உண்டு. சமீபத்திய சென்னை வெள்ளத்தின்போது இவரது வீடு பறவைகளுக்கான நிவாரண முகாமாக மாறிப் போயிருந்தது.
ஜோசப் சேகரின் வீடு முழுக்க கிளிகள் குவிந்திருக்க அந்தப் பகுதியே கீச் கீச் சத்தத்தால் திக்குமுக்காடிப் போனது. வழக்கமாகவே இவரது வீட்டுக்கு ஏகப்பட்ட கிளிகள் தினசரி வருமாம். இரை உண்ணவும், ஓய்வெடுக்கவும் ஜோசப் சேகரின் வீடுதான் இந்த கிளிகளுக்கு விருப்ப இடமாக விளங்குகிறது.
இந்த நிலையில் சமீபத்திய மழை வெள்ளம் பல ஆயிரம் கிளிகளை ஜோசப் சேகரின் வீடு தேடி வர வைத்து விட்டது. இதுகுறித்து தி நியூமிஸ்மினிட் போட்டுள்ள ஒரு சுவாரஸ்ய செய்தி.

10 நாட்கள் தஞ்சமடைந்த கிளிகள்
"வெள்ளம் பாதித்த அந்த பத்து நாட்களும் எனது வீடு ஒரு நிவாரண முகாம் போலவே இருந்தது. காலையில் வந்தால் மாலை வரை எனது வீட்டிலேயே இருக்கும் இந்தக் கிளிகள்.

5000 கிளிகள்
கிட்டத்தட்ட 5000 கிளிகள் வரை எனது வீட்டின் மாடி உள்ளிட்ட பகுதிகளில் அடைக்கலம் புகுந்திருந்தன. வழக்கமான நாட்களில் கிட்டத்தட்ட 3000 கிளிகள் வரை கூடியிருக்கும்.

தவறாமல் போய்.. மறக்காமல் திரும்பி வரும்
மாலைக்கு மேல் அத்தனையும் போய் விடும். எங்கு போகும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அடுத்த நாள் காலை தவறாமல் வந்து விடும் என்றார் சேகர். ராயப்பேட்டையில் ஒரு கேமரா ரிப்பேர் கடை நடத்தி வருகிறார் சேகர்.

வெள்ளத்திலும் விடாத அன்பு
வெள்ளத்தில் சேகரின் வீடும் தப்பவில்லை. அவரது வீட்டுக்குள்ளும் முழங்கால் வரைக்கும் தண்ணீர் வந்தது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் ரெயின்கோட் போட்டுக் கொண்டு தினசரி மாடிக்குப் போய் விடுவாராம் சேகர்.

காலையும் மாலையும்
தினசரி காலையும், மாலையும் கிளிகளுக்கு இரை வைத்து விட்டு வருவாராம். மழைக்காகவோ வெள்ளத்துக்காவோ இதைச் செய்யத் தவறியதில்லையாம் அவர்.

அதனால் என்ன பரவாயில்லை
"சாதாரண நாட்களில் நான் மாடியை தினசரி 2 வேளை சுத்தம் செய்வேன். ஆனால் மழை நாட்களில் கிளிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் தினசரி 5 வேளை பெருக்கும் நிலை ஏற்பட்டது" என்றார் சேகர்.

10 நாட்களுக்கு ஸ்டாக் இருக்கும்
தினசரி கிளிகளுக்கு இரை போட தேவையானதை எப்போதுமே ஸ்டாக் வைத்திருப்பாராம் அவர். குறைந்தது 10 நாட்கள் வரைக்குமான தீனியை அவர் ஸ்டாக் வைத்திருப்பாராம். எனவேதான் வெள்ள பாதிப்பின்போது அவருக்கு இரைக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லையாம்.

சுனாமி தாக்கியபோது
2004ம் ஆண்டு சென்னையை சுனாமி தாக்கியபோதுதான் முதல் முறையாக பறவைகள் மீது காதல் பிறந்துள்ளது சேகருக்கு. அப்போது அவரது கடைக்கு சுனாமிக்கு அடுத்த சில நாட்களில் இரண்டு பறவைகள் வந்துள்ளன. அதற்குத் தீனி போட்டுள்ளார் சேகர். அது அப்படியே பழக்கமாகி விட பறவைகளின் எண்ணிக்கையும் கூடி விட்டதாம்.

பாராட்டலாம்
சுனாமிக்குப் பிறகு சென்னை சந்தித்த மிகப் பெரிய பேரிடர் இந்த வெள்ளம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பும் கூட இந்த அளவுக்குப் பறவைகள் சேகர் வீட்டைத் தேடி வந்துள்ளது என்ற போதிலும் இப்போதுதான் மிகப் பெரிய அளவில் வந்ததாக அவர் கூறுகிறார்.
பாராட்டுக்குரியவர்தான் ஜோசப்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications