வானில் விமானம்.. பயங்கர வெடிச் சத்தம்.. இரவெல்லாம் தூங்காமல் தவிக்கும் கரூர் மாவட்ட மக்கள்!
கரூர்: கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இடி இடிப்பதுப் போல் பலத்த வெடிச்சத்தம் சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மர்ம சப்தம் குறிப்பாக ஈசநத்தம், பண்ணப்பட்டி, எருமார்பட்டி, அஞ்சகவுண்டன்பட்டி உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் கேட்டுள்ளது. இதனால் பல வீடுகளில் அதிர்வுகளும் ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறினர்.

இதே போன்ற சப்தம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் நான்கு முறை கேட்டுள்ளதாம். அந்த சமயத்தில், வானில் விமானம் பறந்ததாகவும் அதன் பிறகே இந்த வெடிச்சத்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அடிக்கடி கேட்கும் வெடி சப்தத்தினால் இப்பகுதி மக்கள் இரவு தூக்கத்தை தொலைத்து நிற்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்திக்கு தகவல் தெரிவிக்க அவர் இது குறித்து விசாரித்து மக்கள் அச்சம் போக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உளவு விமானம் காரணமா?
இங்கிலாந்திலும் இதுபோல சில மாதங்களுக்கு முன்பு பலத்த சப்தம் வானில் கேட்டது. அந்த சத்தத்திற்கு அமெரிக்காவின் ரகசிய உளவு விமானமாக கருதப்படும் அரோராவே காரணம் என்றும் கூறப்படுகிறது. அதே விமானம் கரூருக்கு மேலே பறந்ததா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
காரணம் இந்த அரோரா விமானம் மிக பயங்கரமான சத்தத்தை எழுப்பக் கூடியது. காரணம் இதன் படு வேகம். எனவே இங்கிலாந்தை பயமுறுத்திய அதே அரோரா தற்போது இந்தியா பக்கமாகவும் பறந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications