திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலம் : பக்தர்கள் குவிந்தனர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா இன்று தொடங்கியுள்ளது. நாளை ஆடி பரணியும், 28ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா, தெப்பத்திருவிழாவும் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் 5ம் படைவீடாக திகழும் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி முதலான விழாக்கள் சிறப்பாக நடைபெறும். இங்கு ஆடிக்கிருத்திகை விழா அமர்க்களமாக நடைபெறுவது வழக்கம்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாது புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.

ஆடிக்கிருத்திகை தொடக்கம்
ஆடிக்கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்கியுள்ளது. 27ம் தேதி ஆடி பரணியும், 28ம் தேதி ஆடிக்கிருத்திகை, முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றன. இந்த விழாவில், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளது தமிழக அரசு.

பக்தர்கள் வருகை
பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மலர்க்காவடி, மயில் காவடி உள்பட பல்வேறு காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.இந்த விழாவுக்கு வருகை தருவதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் திருவள்ளூர் மற்றும் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன.

பக்தர்களுக்கு ஏற்பாடு
மலையடிவாரப் பகுதியில், காவடிகள் வருவதற்கும் பக்தர்கள் பால் குடம் எடுத்து வருவதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. முடிகாணிக்கை செலுத்துவதற்கு வரும் பக்தர்களுக்கு, இரண்டு மூன்று இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தெப்பத்திருவிழா
ஆடிக்கிருத்திகை மற்றும் அதையொட்டி நடைபெறும் தெப்பத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறையினரும் பூஜை ஏற்பாடுகளை சிவாச்சார்யர்களும் செய்து வருகின்றனர். 28ம் தேதியன்று முதல்நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. பக்தர்கள் இன்று முதலே குவியத் தொடங்கியுள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்
29ம் தேதியன்று இரண்டாம் நாள் தெப்ப நிகழ்ச்சியும், 30ம் தேதியன்று மூன்றாம் நாள் தெப்ப நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு 30ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் 28ம் தேதி இரவு 12 மணி வரை அனைத்து வித லாரிகள், கன்டெய்னெர் லாரிகள் திருத்தணி நகருக்குள் நுழைய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications