காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை : ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுக்காற்றுக் குழுவையும் உடனடியாக அமைக்கக்கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த மோடியை எதிர்த்து அரசியல் கட்சிகள் சார்பில் கறுப்புக்கொடி போராட்டம் நடந்தது.
இருப்பினும் திட்டமிட்டபடி, சென்னை வந்த பிரதமர் திருவிடந்தையில் நடக்கும் ராணுவ கண்காட்சியை திட்டமிட்டபடி துவக்கி வைத்தார். அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, அங்கிருந்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைரவிழா நிகழ்வில் கலந்துகொண்டார்.
அடையாறு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்த மோடி, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லிக்கு புறப்பட்ட மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.
அந்த கோரிக்கை மனுவில், அடுத்த பருவகாலம் ஜூன் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளதால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
மேலும், காவிரி ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.
-
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி












Click it and Unblock the Notifications