காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை : ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுக்காற்றுக் குழுவையும் உடனடியாக அமைக்கக்கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த மோடியை எதிர்த்து அரசியல் கட்சிகள் சார்பில் கறுப்புக்கொடி போராட்டம் நடந்தது.
இருப்பினும் திட்டமிட்டபடி, சென்னை வந்த பிரதமர் திருவிடந்தையில் நடக்கும் ராணுவ கண்காட்சியை திட்டமிட்டபடி துவக்கி வைத்தார். அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, அங்கிருந்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைரவிழா நிகழ்வில் கலந்துகொண்டார்.
அடையாறு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்த மோடி, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லிக்கு புறப்பட்ட மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.
அந்த கோரிக்கை மனுவில், அடுத்த பருவகாலம் ஜூன் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளதால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
மேலும், காவிரி ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications