பிளஸ் 1க்கும் பொதுத்தேர்வு... பிளஸ் டூ மதிப்பெண்களும் குறைப்பு- அரசாணை வெளியிட்டது அரசு!
போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் நடப்பு ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்லிம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பிளஸ் டூ மதிப்பெண்களும் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது " மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் பிளஸ் 1 வகுப்புக்கும் நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும். 10, 11 மற்றும் 12 என 3 ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்பதால் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மதிப்பெண்கள் +1 மற்றும் +2விற்கு தலா 600 மதிப்பெண்கள் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக புதிய பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும். ஒவ்வொரு பாடத்திலும் 10 சதவீதம் அகமதிப்பீடு அளிக்கப்படும். இதே போன்று பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார் செங்கோட்டையன்.
ஒரு வேளை பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால் இதனால் பனிரெண்டாம் வகுப்பு செல்வதில் எந்தத் தடையும் இல்லை, தோல்வியுற்ற மாணவர்கள் ஜூன், ஜூலை மாதத்தில் நடைபெறும் தேர்வில் தோல்வியுற்ற பாடத்தை தேர்வெழுதலாம் என்றும் அதற்கான அம்சமும் அரசாணையில் இடம் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மாணவர்களின் மனச்சோர்வை போக்க மாலை நேரங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் சனிக்கிழமைகளில் 3 மணி நேரம் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படும் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications