வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரங்களை இலவசமாக வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
திருச்சி: கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கியும் அழுகியும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, 1 மூட்டை பொட்டாஷ் 15 கிலோ சல்பேட் போன்ற உரங்களை விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி அருகே உள்ள வயலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும் தொட்டக்கலை பயிர்களான உளுந்து, ஆமணக்கு., பயறு வகைகள் போன்றவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.

மழை காலங்களில் டெல்டா மாவட்டங்களில் வீணாகும் சுமார் 5 லட்சம் கனஅடி தண்ணீரை காவிரி மற்றும் கொள்ளிடத்தில் தலா 10 தடுப்பு அணைகள் கட்டி சேமிக்கவும், அவற்றை மாவட்டங்களுக்கு அனுப்பும் வகையில் ரூ. 250 கோடியில் அறிமுகப்படுத்தியுள்ள வைகை குண்டாறு திட்டத்தை விரைவில் அணுமதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை வெள்ளத்தில் மூழ்கியும் அழுகியும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, 1 மூட்டை பொட்டாஷ் 15 கிலோ சல்பேட் போன்ற உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
வட மாநிலங்களைப் போல அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் தமிழகத்தில் உள்ள வீராணம் போன்ற மிகப்பெரிய ஏரிகளின் கரைகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications