எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா டிடிவி தினகரன் தலைமையில் தான் நடத்த வேண்டும்!
சென்னை: எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா டிடிவி தினகரன் தலைமையில் தான் நடத்த வேண்டும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழியுறுத்தியுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வெளி வந்ததும் மீண்டும் கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு ஆரம்பத்தில் அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் பலர் தினகரனை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். இதுவரை 34 எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று மாலை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது தினகரனின் கட்சி பணிக்கு அமைச்சர்கள் யாரும் தடையாக இருக்கக் கூடாது என்று வழியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்சியை மட்டும் அமைச்சர்கள் கவனிக்க வேண்டும் என்றும், கட்சியை தினகரன் பார்த்துக் கொள்வார் என்றும் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்ததாக தெரிகிறது.
தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு தருவோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏல்கள் கூறியுள்ளனர்.
மேலும், அதிமுக இப்தார் நிகழ்ச்சிக்கு டிடிவி தினகரன் தலைமையில்தான் நடக்க வேண்டும். எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா டிடிவி தினகரன் தலைமையில் தான் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications