சென்னையில் வேல்முருகன் தலைமையில் என்எல்சி தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதம்!!
சென்னை: என்.எல்.சி நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 30 ஆண்டுகாலமாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 10-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் தலைமையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நெய்வேலியில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்ட பேருந்துகளில் புறப்பட்டு வந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் தி. வேல்முருகன் கூறியதாவது:

என்எல்சி நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணி செய்து வருபவர்கள் குறைந்த ஊதியத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 10,600 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் இதுவரை செய்யப்படவில்லை.
இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னையில் தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர் வாழ்வுரிமை சங்கத்தின் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. 2012ம் ஆண்டுக்குள் குறைந்தது 5 ஆயிரம் பேர் பணிநிரந்தரம் செய்வதாக கூறிய நிலையில் என்எல்சி நிர்வாகம் இதுவரை ஏமாற்றி வருகிறது.
இவ்வாறு தி. வேல்முருகன் கூறினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications