வாக்களிக்க வலியுறுத்தி காலவரையற்ற பேசும் விரதம்! மிஸ்டு கால் கொடுக்க நீங்க ரெடியா?
சென்னை: தேர்தலை முன்னிட்டு, புதிய வாக்காளர்களிடையே ஓட்டு போடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ''வை ராஜா மை'' என்ற பெயரில் 24/7 மணி நேர தொடர் பேசும் மாரத்தான் நடத்தி வருகிறது.
ஆர்.ஜே.விக்னேஷ், அன்புதாசன், கார்த்திக் மற்றும் பலர் இதில் பங்கேற்று பேசிவருகிறார்கள்.
இது குறித்து 'ஸ்மைல் சேட்டை' குழுவினரில் ஒருவரான கலையரசன் கூறியுள்ளதாவது:
சுமார் 1 கோடி புதிய தலைமுறை வாக்காளர்களிடையே ஓட்டு போடுவதன் அவசியத்தை புரிய வைக்க வேண்டும் என்று யோசித்தோம். எங்களின், 7878745566 என்ற தொலைபேசி எண்ணுக்கு ஐந்து லட்சம் மிஸ்ட் கால்கள் வரும் வரை, கடந்த கால தேர்தல் பற்றிய தகவல்கள், அரசியல் வரலாறு, 234 தொகுதிகளின் வேட்பாளர் விவரம் உள்ளிட்ட சுவாரசியமான விஷயங்களைத் தொடர்ந்து 24/7 மணி நேரமும் தொடர்ந்து பேச உள்ளோம்.
சுமார் 120 மணி நேரத்துக்கான தகவல்களைத் தொகுத்து வைத்திருக்கிறோம். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திங்கள்கிழமை, நேற்று, காலை 10 மணிக்கு, 'நாட்டுக்காக காலவரையற்ற பேசும் விரதம்' தொடங்கிவிட்டது. வாசகர்கள் தங்களின் செல்ஃபி வீடியோக்கள், வாட்ஸ்- அப் உரையாடல்கள், சாட்கள், அழைப்புகள் மூலம் குழுவினரை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த உரையாடல்களும் யூடியூப்பில் ஒளிபரப்பப்படுகிறது.
ஐந்து லட்சம் மிஸ்ட் கால்கள் என்பதே இலக்கு. ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து எத்தனை முறை மிஸ்ட் கால் கொடுத்தாலும், ஒரு முறை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறையும் மிஸ்ட் கால்களின் எண்ணிக்கை பதிவேற்றப்படும்.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஆதித்யா தொலைக்காட்சி ஆதவன், உறுமீன் இயக்குநர் சக்திவேல் உள்ளிட்டோர் இந்த குழுவிற்கு ஊக்கமளித்துச் சென்றிருக்கின்றனர்.
நீங்களும் மிஸ்டுகால் கொடுத்து ஊக்கம் தரலாமே..
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications