காவிரியில் புதிய அணைகள் கட்ட எதிர்ப்பு : நவ.22-இல் வைகோ மறியல்
திருவாரூர்: காவிரியில் 2 புதிய அணைகள் கட்ட கர்நாடகம் முயற்சிப்பதைக் கண்டித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நவம்பர் 22-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 2 புதிய அணைகள் கட்டுவதற்கு கர்நாடகம் முயற்சி செய்து வருகிறது.
இதனைத் தடுக்க வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதியில் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாய பிரதிநிதிகள் தமிழகத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விவசாயப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்புக்குப் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது: காவிரி நதியினால் 12 மாவட்டங்கள் பயன்பெற்று வருகின்றன. 3 கோடி விவசாயிகள் மற்றும் 75 சதவீத தமிழக மக்களின் வாழ்வாதாரம் காவிரியை நம்பி உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் 2 அணைகள் கட்டப் போவதாக அறிவித்துள்ளது.
இதனைத் தடுக்க தமிழக மக்கள், அரசியல் கட்சிகள், வணிகர்கள் ஓரணியில் திரள வேண்டும். நவம்பர் 22-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் நான் (பங்கேற்க உள்ளேன் என்றார்.
வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன், வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் கடையடைப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications