தீவிரமான பருவமழை... வரத்து குறைவால் ஆப்பிளைவிட கத்தரிக்காய் விலை அதிகம்!!
தூத்துக்குடி: பருவமழை தீவிரமடைந்து வருவதால் காய்கறி வரத்துகள் கணிசமாக குறைந்துபோய்விட்டன. இதனால் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதில் கத்தரிக்காய் விலை ஆப்பிளை விட கூடுதலாக விற்கப்படுவதால் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர், முடுக்குமீட்டான்பட்டி, இடைசேவல், கயத்தாறு,கழுகுமலை, கடலையூர், மூப்பன்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் மானாவரி பயிர் மட்டுமின்றி காய்கறிகளையும் பயிர் செய்து வருகின்றனர். இங்கு விளையும் காய்கறிகள் கோவில்பட்டி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நிலங்களில் நீர்பிடிப்பு அதிகம் உள்ளது. இந்த ஈரப்பதம் நன்றாக காயும்போதுதான் காய்கறி செடிகள் நன்றாக காய்க்கும். தொடர்மழையால் நீர் வடியாமல் இருப்பதால் செடிகளில் பூக்கள் வாடி வருகின்றன. இதனால் காய்கறி விளைச்சல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி சந்தைக்கு தற்போது மிகவும் குறைந்த அளவுதான் காய்கறிகள் வருகின்றன. இதனால் இவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன. ஒரு கிலோ கத்தரிக்காய் விலை மழைக்கு முன்பாக ரூ.30 முதல் ரூ.40 வரை மட்டுமே விற்கப்பட்டது. தற்போது அது ரூ.100க்கு விற்கப்படுகிறது. இது போல் வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், பூசணிக்காய், சீனி அவரைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் உயர்ந்துவிட்டது.
என்னதான் விலை உயர்ந்தாலும் வாங்கிச் செல்ல வேண்டிய நெருக்கடியில் பொதுமக்கள் தவியாய் தவிக்கின்றனர்....
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications