விஷ்ணுப்பிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: கடலூரில் திமுக சாலை மறியல்
கடலூர்: தற்கொலை செய்துகொண்ட திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி அவரது சொந்த ஊரான கடலூரில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படும் நேரத்தில் திமுகவினர் சாலைமறியல் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக கடந்த 7 மாதமாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுப்பிரியா 27. வெள்ளிக்கிழமையன்று அவரது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுப் பிரியாவின் தற்கொலைக்கு உயரதிகாரிகள் டார்ச்சர் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
காவல்துறையினரிடையே மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷ்ணுப்பிரியாவின் மரணம் குறித்து மாவட்ட எஸ்.பி செந்தில் குமார் உத்தரவின் பேரில் ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடத்திவந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக அரசு நேற்று மாலை உத்தரவிட்டது. உடனடியாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். பணியில் இருந்த போலீசாரிடமும் விசாரணை நடத்தப்படப்பட்டது. உயர் அதிகாரிகளிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விஷ்ணு பிரியாவின் பெற்றோரும், பல்வேறு அரசியல் கட்சியனரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே சொந்தவூரான கடலூரை அடுத்த கோண்டூருக்கு கொண்டுசெல்லப்பட்டு விஷ்ணுப்பிரியா உடலை பார்த்த உறவினர்கள் நண்பர்கள் கதறி அழுதனர். விஷ்ணுப்பிரியாவின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த நிலையில் விஷ்ணுப்பிரியாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி அவரது சொந்த ஊரான கடலூரில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றனர். இதனையடுத்து அங்கு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications