சசிகலாவின் பவர் மையம் விவேக்கிடம் ஆறுமுகசாமி கமிஷன் 3 மணி நேர விசாரணை!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு இளவரசியின் மகன் விவேக் ஆஜராகியுள்ளார்.
Recommended Video

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமகிடம் 3 மணி நேரம் விசாரணை முடிந்தது. மீண்டும் பிப்ரவரி 28ம் தேதி கமிஷனில் ஆஜராக உள்ளதாக விவேக் கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வந்த நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்கு அச்சாரமாக ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது.

சென்னை எழிலகத்தில் கலசமஹாலில் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை அப்பலோ மருத்துவமனை, ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், கைரேகை பதிவு பெற்ற டாக்டர் பாலாஜி, எம்பார்மிங் செய்த டாக்டர் சுதாசேஷையன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா ஏற்கனவே ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில், இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஓவுவமாக விவேக் ஜெயராமனை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி கடந்த வாரத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் நோட்டீஸை ஏற்று விவேக் ஜெயராமன் இன்று விசாரணைக்கு ஆஜரானார். காலை 10 மணி முதல் சுமார் 3 மணி நேரமாக விவேக்கிடம் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து வெளியே வந்த விவேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது : விசாரணைக் கமிஷன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். சட்டப்படி அங்கு கூறிய விவரங்களை தெரிவிப்பது தவறு.மீண்டும் பிப்ரவரி 28ம் தேதி ஆஜராக சொல்லி இருக்கிறார்கள் அப்போது ஆராவேன் என்றார்.
-
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications