டிடிவி தினகரன் து.பொ. செயலாளர் இல்லை.. பொதுக்குழு எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறோம்: தம்பிதுரை
அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தினகரன் இல்லை என்று பொதுக் குழு எடுத்த முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்று தம்பிதுரை கூறியுள்ளார்.
டெல்லி: அதிமுகவின் தலைமை எடுக்கும் முடிவிற்கு நாங்கள் கட்டுப்பட்டு செயல்படுகிறோம் என்று லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
டெல்லியில் லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அதிமுக கட்சியின் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதன்படி செயல்படுவோம். எங்களுக்குள் பிளவு என்பது கிடையாது. நாங்கள் ஒன்றுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
கழகத்தின் பொதுக் குழு என்ன முடிவெடுத்திருக்கிறதோ அதன்படி கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்திலும் என்ன செய்ய வேண்டுமோ அதனை தலைமைக் கழகம் முடிவெடுத்துச் செய்யும்.
கட்சி பிளவு பட்டிருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும்தான் சொல்ல வேண்டும். மற்றவர் யாரும் சொல்ல உரிமை கிடையாது. கட்சியில் மூன்றில் 2 பங்கு பிரிந்து சென்றால்தான் அது பிளவாகக் கருதப்படும். அப்படி ஒரு பிளவு அதிமுகவில் ஏற்படவில்லை. 3 அணி, 4 அணி என்று ஊடகங்கள்தான் பேசி வருகிறது.
துணைப் பொதுச் செயலாளராக தினகரன் இல்லை என்று கட்சியின் தலைமை முடிவெடுத்துவிட்டது. அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். ஜெயலலிதாவால் யார் நியமிக்கப்பட்டார்களோ அவர்கள் தலைமைக் கழகத்தில் கூடி ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். தமிழகத்தில் நல்லாட்சித் தொடரும். அடுத்த 4 ஆண்டுகள் மட்டுமல்லாமல் 100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தமிழகத்தில் இருக்கும் என்று தம்பிதுரை கூறினார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications