டிடிவி தினகரன் து.பொ. செயலாளர் இல்லை.. பொதுக்குழு எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறோம்: தம்பிதுரை
அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தினகரன் இல்லை என்று பொதுக் குழு எடுத்த முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்று தம்பிதுரை கூறியுள்ளார்.
டெல்லி: அதிமுகவின் தலைமை எடுக்கும் முடிவிற்கு நாங்கள் கட்டுப்பட்டு செயல்படுகிறோம் என்று லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
டெல்லியில் லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அதிமுக கட்சியின் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதன்படி செயல்படுவோம். எங்களுக்குள் பிளவு என்பது கிடையாது. நாங்கள் ஒன்றுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
கழகத்தின் பொதுக் குழு என்ன முடிவெடுத்திருக்கிறதோ அதன்படி கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்திலும் என்ன செய்ய வேண்டுமோ அதனை தலைமைக் கழகம் முடிவெடுத்துச் செய்யும்.
கட்சி பிளவு பட்டிருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும்தான் சொல்ல வேண்டும். மற்றவர் யாரும் சொல்ல உரிமை கிடையாது. கட்சியில் மூன்றில் 2 பங்கு பிரிந்து சென்றால்தான் அது பிளவாகக் கருதப்படும். அப்படி ஒரு பிளவு அதிமுகவில் ஏற்படவில்லை. 3 அணி, 4 அணி என்று ஊடகங்கள்தான் பேசி வருகிறது.
துணைப் பொதுச் செயலாளராக தினகரன் இல்லை என்று கட்சியின் தலைமை முடிவெடுத்துவிட்டது. அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். ஜெயலலிதாவால் யார் நியமிக்கப்பட்டார்களோ அவர்கள் தலைமைக் கழகத்தில் கூடி ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். தமிழகத்தில் நல்லாட்சித் தொடரும். அடுத்த 4 ஆண்டுகள் மட்டுமல்லாமல் 100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தமிழகத்தில் இருக்கும் என்று தம்பிதுரை கூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications