மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை வைப்பதில் ஜெ. தயங்கியது இதற்குதானாம்!
திமுக ஆட்சியில் மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை சூட்டுவோம் என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
Recommended Video

மதுரை: திமுக ஆட்சியில் மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை சூட்டுவோம் என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த விவகாரத்தில் மறைந்த ஜெயலலிதா தாமதித்தற்கு காரணமே சமூக பதற்றம் ஏற்படக் கூடாது என நினைத்ததுதானாம்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பசும்பொன்னில் பேட்டியளித்த தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தேவரின் புகழை போற்றும் வகையில் முதல்வராக இருந்த கருணாநிதி மதுரை கோரிப்பாளையத்தில் அவருக்குப் பிரமாண்ட சிலை எழுப்பி பெருமை சேர்த்தார்.

நூற்றாண்டு விழாவில் திமுக
பசும்பொன் கிராமத்தில் தேவர் நினைவிடத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற நேரத்தில் மணிமண்டபம், அணையா விளக்கு அமைத்து தந்தவரும் கருணாநிதிதான்.

ஸ்டாலின் உறுதி
பசும்பொன் தேவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு உரிய குரல் கொடுத்து நடவடிக்கை எடுப்போம் என்றார் உறுதியாக.

மற்றொரு தரப்பு கோரிக்கை
ஸ்டாலினின் அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் ஒருவர், முத்துராமலிங்கத் தேவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், விமான நிலையத்துக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இமானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

தங்க கவசத்துடன் நிறுத்தம்
இதை உணர்ந்துதான் 13 கிலோ தங்கக் கவசத்தோடு ஜெயலலிதா நிறுத்திக் கொண்டார். அ.தி.மு.கவின் பிரதான வாக்கு வங்கியில் முக்குலத்தோர் சமூகத்துக்கு கணிசமான பங்கு உண்டு. இருப்பினும் விமான நிலையத்துக்குப் பெயர் வைக்கும் கோரிக்கையை சற்று தள்ளி வைத்தார் ஜெயலலிதா. அனைத்து சமூக மக்களின் ஆதரவோடு பெயர் சூட்டப்பட்டால், அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என கருதினார் ஜெயலலிதா. அதனால்தான் விமான நிலையத்துக்கு பெயர் சூட்டும் விவகாரத்தில் ஜெயலலிதா அவசரப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா!












Click it and Unblock the Notifications