முதல்வராக இல்லாத ஓபிஎஸ்ஸை சந்திக்கும் மோடி விவசாயிகளை சந்திக்க மறுப்பது ஏன்.. பிரேமலதா கேள்வி
முதல்வராக இல்லாத ஓபிஎஸ்ஸை சந்திக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளை ஏன் சந்திக்க மறுக்கிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேம லதா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்திக்கும் பிரதமர் மோடி விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை ஏன் சந்திக்க மறுக்கிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
பயிர்க் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் 41 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமரை சந்திக்க விவசாயிகள் தொடர்ந்து நேரம் கேட்டும் மோடி கொடுக்கவே இல்லை. இதுகுறித்து பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

விவசாயிகளை சந்திக்க மறுப்பதேன்?
ஓபிஎஸ் மாநிலத்தில் முதல்வராக இல்லை. எந்த அடிப்படையில் அவரை மோடி சந்திக்கிறார். ஓபிஎஸ்ஸை சந்திப்பவர் ஏன் விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார். ஏன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்திக்க மறுக்கிறார்?

மோடிக்கு ஐடியா
ஒரு பிரதமராக மோடி நடுநிலையோடு செயல்படுவதே நல்லது. ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதே போன்று மோடி நாட்டுக்காக செய்ய வேண்டிய வேலை அதிகம் இருக்கிறது. அதில் அவர் கவனம் செலுத்தலாம்.

அதிமுக உட்கட்சிப் பூசல்
அதைவிட்டு அதிமுகவில் நடைபெறும் உட்கட்சிப் பிரச்சனையில் மோடி ஈடுபடுவது சரியல்ல. பிரதமருக்கு என்று சில நடைமுறை திட்டங்கள் இருக்கிறது. அதை அவர் செய்துவிட்டுப் போகலாம் என்று பிரேமலதா கூறினார்.

விவசாயிகளுடன் சந்திப்பு
விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, பிரேமலதா டெல்லி சென்று அய்யாக்கண்ணுவை சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகள் நடத்திய தரையில் சோறு போட்டு உண்ணும் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications