முதல்வராக இல்லாத ஓபிஎஸ்ஸை சந்திக்கும் மோடி விவசாயிகளை சந்திக்க மறுப்பது ஏன்.. பிரேமலதா கேள்வி
முதல்வராக இல்லாத ஓபிஎஸ்ஸை சந்திக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளை ஏன் சந்திக்க மறுக்கிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேம லதா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்திக்கும் பிரதமர் மோடி விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை ஏன் சந்திக்க மறுக்கிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
பயிர்க் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் 41 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமரை சந்திக்க விவசாயிகள் தொடர்ந்து நேரம் கேட்டும் மோடி கொடுக்கவே இல்லை. இதுகுறித்து பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

விவசாயிகளை சந்திக்க மறுப்பதேன்?
ஓபிஎஸ் மாநிலத்தில் முதல்வராக இல்லை. எந்த அடிப்படையில் அவரை மோடி சந்திக்கிறார். ஓபிஎஸ்ஸை சந்திப்பவர் ஏன் விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார். ஏன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்திக்க மறுக்கிறார்?

மோடிக்கு ஐடியா
ஒரு பிரதமராக மோடி நடுநிலையோடு செயல்படுவதே நல்லது. ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதே போன்று மோடி நாட்டுக்காக செய்ய வேண்டிய வேலை அதிகம் இருக்கிறது. அதில் அவர் கவனம் செலுத்தலாம்.

அதிமுக உட்கட்சிப் பூசல்
அதைவிட்டு அதிமுகவில் நடைபெறும் உட்கட்சிப் பிரச்சனையில் மோடி ஈடுபடுவது சரியல்ல. பிரதமருக்கு என்று சில நடைமுறை திட்டங்கள் இருக்கிறது. அதை அவர் செய்துவிட்டுப் போகலாம் என்று பிரேமலதா கூறினார்.

விவசாயிகளுடன் சந்திப்பு
விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, பிரேமலதா டெல்லி சென்று அய்யாக்கண்ணுவை சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகள் நடத்திய தரையில் சோறு போட்டு உண்ணும் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications