கள்ளக்காதலுக்கு இடையூறு.. மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. பரமக்குடியில் அதிர்ச்சி
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே கணவனின் கள்ளக்காதல் உறவை கண்டித்ததற்காக மனைவியை கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள கலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவர் கூலிவேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ரஞ்சிதம். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதனை காரணம் காட்டி சிங்காரம் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக ரஞ்சிதத்திடம் தெரிவித்த சிங்காரம், ரஞ்சிதத்தை வீட்டை விட்டு அடித்து விரட்டியுள்ளார். சிங்காரத்தின் கொடுமைகளை தாங்கி கொண்ட ரஞ்சிதம் அவருடனே இருந்துள்ளார். இதனிடையே கடந்த 4 ம் தேதி இரண்டாம் திருமணம் செய்த பெண்ணை விரட்டி விட்டதாகவும், நாம் இருவரும் இனி பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழலாம் என சிங்காரம் கூறியுள்ளார். இதனை நம்பிய ரஞ்சிதம் சிங்காரத்துடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி தன்னுடைய மனைவியை நகைக்காக யாரோ கொலை செய்து விட்டதாக கிராம மக்களிடம் சிங்காரம் தெரிவித்துள்ளார். மேலும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியானது.
கள்ளக்காதலுக்கு ரஞ்சிதம் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கட்டையால் அடித்து சிங்காரம் கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கட்டையால் அடித்தும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்ததை சிங்காரம் ஒப்புக்கொண்டார். மக்களை நம்ப வைப்பதற்காக நகைக்காக கொலை நடந்ததுபோல் நடித்ததாக தெரிவித்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications