எண்ணெய்...உப்பெல்லாம் இதய தினமான இன்னைக்கே குறைக்க ஆரம்பிங்க - உங்க ஆயுளுக்கு நாங்க கேரண்டி!
சென்னை: மனித வாழ்க்கையின் அடித்தளமாக விளங்கும் இதயத்தினைப் போற்றும் நாளாக இன்று "உலக இதய தினம்" கொண்டாடப்பட்டது.
இந்த தினத்தில் இதயத்தை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.
மனிதர்களின் உயிர் காக்கும் உறுப்பு இதயமாகும். இன்றைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே பலருக்கும் இதய நோய் வந்துவிடுகிறது.

மன உளைச்சலே காரணம்:
வேலைப்பளுவினால் ஏற்படும் மன உளைச்சல் இதற்கு பிரதான காரணம் என்று கூறப்படுகிறது. இது தவிர சிறுவயதிலேயே மது புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை என்பனவும் இதய நோய்க்கு காரணமாக அமைகின்றன.

உலக இதய தினம்:
இளைய தலைமுறை இவற்றை உணர்ந்து தம்மை இதய நோயிலிருந்த காத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் உலக இதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களில் கட்டுப்பாடு இருந்தாலே இதயத்தைப் பாதுக்காக்கலாமாம். எண்ணெய், உப்பு, காரம், கொழுப்பு பொருட்களை ஒரு வயதிற்கு மேல் குறைத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.

இதய நோய்களுக்கு காரணம்:
மாரடைப்பு ஏற்படும் 100 பேரில் 20 பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 50, 60 வயதுகளில் வந்த இதய நோய், தற்போது 30 வயது இளைஞர்களுக்கே வருகிறது. வாழ்க்கை முறை மாற்றம், மாறி வரும் உணவுப் பழக்கத்தால் ஏற்படும் உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புகை மற்றும் மதுப்பழக்கம் போன்றவை இதய நோய்கள் வருவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

பாதுகாப்பு இன்றே அவசியம்:
ஆண்டுதோறும் உலகளவில் ஒரு கோடியே 73 லட்சம் இதய நோயினால் மட்டுமே உயிரிழக்கின்றனர் என்று ஒரு அறிக்கைத் தெரிவிக்கிறது. எனவே, இதயத்தை எப்படியெல்லாம் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று இளைய தலைமுறையினரும், முதியவர்களும் மருத்துவரைக் கலந்தாலோசித்து, இதய நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இன்றே மேற்கொள்வது மிக அவசியமான ஒன்றாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications