என் வாழ்நாளில் வைகோ போன்ற நல்ல தலைவரைப் பார்த்ததில்லை! - யஷ்வந்த் சின்ஹா
கலிங்கப்பட்டி: தனக்குப் பதவி வேண்டாம் என்று கூறி, தன் உடனிருந்தவர்களை உயர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தவர் வைகோ. என் வாழ்நாளில் வைகோ போன்ற சிறந்த தலைவரைப் பார்த்ததில்லை என புகழாரம் சூட்டினார் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.
வைகோவின் தம்பி ரவிச்சந்திரனின் மூன்றாவது மகன் மகேந்திர வையாபுரிக்கும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் இரா கிருஷ்ணசாமியின் பேத்தியும், டாக்டர் ராமதாஸின் உறவுக்காரப் பெண்ணுமான ப்ரீத்திக்கும் இன்று கலிங்கப்பட்டியில் திருமணம் நடந்தது.

யஷ்வந்த் சின்ஹா
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா பேசுகையில், "வாஜ்பாய் அரசில் அமைச்சராகும் வாய்ப்பை வைகோ அவர்கள் தொடர்ந்து மறுத்தார் என்பதை உடனிருந்த நான் நன்கு அறிவேன். மேலும் தன்னோடு இருந்த தனது கட்சியை சேர்ந்தவர்களை ( செஞ்சி இராமச்சந்திரன் , கண்ணப்பன்) அப்பதவியில் அமர வைத்து அழகு பார்த்தவர் வைகோ. இப்படிப்பட்ட தலைவரை நான் கண்டது இல்லை," என்றார்.

ராம் ஜெத்மலானி
பிரபல வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி பேசுகையில், "வைகோ அவர்களின் புகழைப் போல் மணமக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் . உலகத் தமிழர்களை அக்கறையோடு கவனித்து கொள்ளும் ஒரே தலைவர் வைகோ மட்டும் தான்," என்றார்.
"தன்னலம் இன்றியும் பிற உயிர்களுக்கெல்லாம் சுயநலம் இல்லாமல் உழைக்கும் மாமனிதர் வைகோ," என தமிழருவி மணியன் பேசினார்.

நடிகர் சிவகுமார்
"தமிழக வாழ்வாதரத்தை காக்க எந்தப் பிரச்சனையானாலும் முதல் போராளியாக களத்தில் இறங்கி போராடுபவர் வைகோ. போர் குணத்தை புருஷ லட்சணமாகக் கொண்டவர் வைகோ", என்றார் நடிகர் சிவக்குமார்

முன்னாள் டிஐஜி
"வேலூர் சிறைக்குள் இருந்து தனது கட்சியை திறம்பட நடத்தியவர் வைகோ . என்னோடு சிறையில் இருக்கும் தோழர்களுக்கு என்ன உணவு மற்றும் வசதியோ அதைத்தான் நானும் ஏற்பேன் என்று வைராக்கியமாக 19 மாதம் கடைசி வரை இருந்தவர் வைகோ. சிறைக்குள் கொசு கடித்து கொண்டு இருக்கும் .அதனை பொருட்படுத்தாமல் எழுதிக் கொண்டே இருப்பார். எங்கேயோ இருக்க வேண்டியவர் இப்படி சிரமப்படுகிறாரே என கண்ணீர் விட்டது உண்டு," என வேலூர் சிறை முன்னாள் டிஐஜி இராமச்சந்திரன் பேசியபோது பலரும் உணர்ச்சிவயப்பட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications