Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’பங்காளி’ ஜெயக்குமார்.. ’பாச’ தம்பி! ஒரே நாளில் ரூட் மாறிய டிடிவி! ஆனால் ஸ்கெட்ச் மட்டும் அவருக்கு?

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர் : பழைய மன கசப்புகளை மறந்து நண்பர்களாக பங்காளிகளாக இணைந்து செயல்பட வேண்டும். எனவும், ஒ.பன்னீர்செல்வம் அனைவரும் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை. அவரவர் அவரவராகவே இருந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என கூறியுள்ளதாக அம்மா முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"8 வழிச்சாலை எந்த வகையில் வந்தாலும் அந்த பகுதி மக்களுக்கு ஆதரவு தருவோம். பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தினால் மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும்.

மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டக்கூடாது, அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதால் தமிழக அரசும், மத்திய அரசும் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.

பாஜக அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ரொம்ப நாளாக இருக்கும் மொய்விருந்து நிகழ்ச்சியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார் அவர் சொல்வது தவறு. வட்டியில்லாத கடன் தருவது, ஒருவரை கைத் தூக்கிவிடுவது கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அவருக்கு எதுவும் தெரியாது.

பங்காளிகளாக..

பங்காளிகளாக..

ஜெயக்குமார் விமர்சனம் குறித்து எழுப்பிய கேள்விக்கு," பழைய மன கசப்புகளை மறந்து நண்பர்களாக பங்காளிகளாக இணைந்து செயல்பட வேண்டும். ஒ.பன்னீர்செல்வம் அனைவரும் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை. அவரவர் அவரவராகவே இருந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என்பது தான் ஒரே கட்சியில் சேரவேண்டிய அவசியமில்லை" என பேசினார்.

டிவிட்டர் பதிவு

டிவிட்டர் பதிவு

இந்நிலையில் டிடிவி தினகரனின் டிவிட்டர் பதிவும் அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதில்,'கடந்த கால கசப்புணர்வா?அல்லது புரட்சித்தலைவரும் நம் அம்மா அவர்களும் நமக்கு புகட்டிய லட்சிய உணர்வா?
எதைப்பற்றி இப்போது சிந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்.
மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணியைத்தான் யோசிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

 அண்ணன் டிடிவி

அண்ணன் டிடிவி

மற்றொரு பதிவில்,"இதனை உணர்ந்து செயல்பட்டால் நல்லது என்பதை,அண்ணன் TTV என்று பழைய பாசத்தோடு சொல்லும் தம்பிக்கு தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். நேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதை வைத்தே தினகரன் இப்படி பதிவிட்டிருக்கிறார் எனவும், ஆனால் 'மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை' என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+