தஞ்சையில் பயங்கரம்! வியாபாரிகளிடம் மாமூல் கேட்ட ரவுடிகள்! தட்டிக்கேட்ட இளைஞர் வெட்டிக் கொலை!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வியாபாரிகளை மிரட்டி மாமூல் கேட்ட ரவுடிகளை தட்டிக்கேட்ட இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் டவுண் பகுதியில் உள்ள அக்ரஹாரம் வீதியில் அதிக அளவில் மீன் கடைகள் இருக்கின்றன. இங்கு சில ரவுடிகள் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பதையும், பணம் தராத வியாபாரிகளை தாக்குவதையும் வழக்கமாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்கிருந்த மீன் வியாபாரிகளை விஸ்வபிரசாத் (35) என்ற ரவுடி மாமூல் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த பிரேம்குமார் (27) என்ற இளைஞர் விஸ்வபிரசாத்தை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து விஸ்வபிரசாத் சென்றுவிட்டதாக தெரிகிறது.

மார்க்கெட்டில் அனைவரின் முன்பும் பிரேம்குமார் தன்னை தட்டிக் கேட்டதால் ரவுடி விஸ்வ பிரசாத்துக்கு அவமானம் ஆகியுள்ளது. பிரேம்குமாரை தீர்த்துக்கட்டினால் தான் இனி நம்மால் மார்க்கெட்டுக்கு செல்ல முடியும் என அவர் கருதியுள்ளார். இதனால் பிரேம்குமாரை கொலை செய்ய தனது கூட்டாளிகளுடன் விஸ்வபிரசாத் திட்டம் தீட்டினார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளிய அக்ஹாரம் புறவழிச்சாலையில் உள்ள மதுபானக் கடையில் விஸ்வபிரசாத் மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் (36) ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பிரேம்குமார் நடந்து சென்று கொண்டிருந்தார். இதையடுத்து, அவரை வழிமறித்த விஸ்வபிரசாத்தும், மணிகண்டனும் அவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த விஸ்வபிரசாத்தும், மணிகண்டனும் பிரேம்குமாரை வெட்டினர். இதில் காயமடைந்த பிரேம்குமார் உயிரை காப்பாற்ற அங்கிருந்து ஓடினார். ஆனால் அவரை விடாமல் துரத்திய விஸ்வபிரசாத், மணிகண்டன் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பிரேம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவறிந்ததும் பிரேம்குமாரின் உறவினர்களும், அவரது பகுதியைச் சேர்ந்த மக்களும் அங்கு திரண்டு வந்தனர். மேலும், கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி தஞ்சை - கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார் என உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
மீன் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தகராறு செய்த ரவுடியை தட்டிக் கேட்ட இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications