வைகை அணைக்கு சென்ற அமைச்சர்கள்.. பறந்து வந்த தேனீக்களால் தேனியில் ஒரே பரபரப்பு
தேனி : தேனி மாவட்டம் வைகை அணையில் இன்று விவசாயிகளின் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள் அதிகாரிகள் கூட்டத்திற்குள் புகுந்த தேனீக்கள் அதிகாரிகளை சரமாரியாக கொட்டியது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
தேனி , மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், மாவட்டங்களில் 1லட்சத்தி 60 ஆயிரம் ஏக்கர் விவசாயிகன் பயன்பெரும் வகையில் தமிழக முதல்வர் உத்தரவையடுத்து மூன்றாவது முறையாக வைகை அணையை இன்று திறக்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டார்.
வைகை அணையில் தண்ணீர் திறப்பதற்கு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுபணித்துறை அலுவலர்கள் அணையின் மேற்பகுதியில் குவிந்து இருந்தனர்.

அமைச்சர்கள் கூட்டத்தில்
அப்போது அணைப்பகுதியின் அடி சுவரில் இருந்த தேனீக்கள் எதிர்பாராத விதமாக களைந்து வந்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அலுவலர்கள் கூட்டத்தில் புகுந்து கொட்டியது .

அதிகாரிகள் காயம்
இதனையடுத்து தேனீக்களின் தாக்குதலுக்கு உள்ளான 7 க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தேனீக்களுக்கு பிடிக்காது
தேனீக்களிடம் கொட்டு வாங்கி சிகிச்சை பெற்ற பொதுபணித்துறை அலுவலர் சுகுமார் தாங்கள் வாசனை திரவியங்களை உபயோகித்ததாலும் தேனீக்களுக்கு வாசனை திரவியங்கள் பிடிக்காது எனவும் இதனால் தேனிக்கள் தங்களை கொட்டியதாகவும் தெரிவித்தார்.

தேனியில் பரபரப்பு
இதனையடுத்து பொதுப்பணித்துறையினரால் அணையின் அடிப்பகுதியில் உள்ள தேனீக்கள் அப்புறபடுத்தப்பட்டது. அமைச்சர் கூட்டத்தில் புகுந்த தேனீக்களால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications