வைகை அணையில் 4,000 கனஅடி தண்ணீர் திறப்பு.. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தேனி: வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, 71 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தேக்கப்படும் நீரானது, தேனி திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணையின் முழு கொள்ளவான 71 கனஅடியில் 70 கனஅடி நிரம்பியுள்ளது. நேற்று வரை வைகை அணைக்கு சுமார் 3,127 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதில் சுமார் 2,069 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மதுரை, இராமநாதபுரம், மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிக்கு வைகை அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும். தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகமானதால், வைகை அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.
இதன் காரணமாக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டுவந்த 2 ஆயிரம் கன அடி நீரானது காலை 11 மணி முதல் 400 கன அடியாக உயர்த்தி திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் ஆற்றுபகுதி அமைந்துள்ள தேனி, திண்டுக்கல் , மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வைகை ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பு பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications