கார்த்திகை தீப விழா.. 150 ரவுடிகளுடன் கோயிலுக்கு வந்த தங்கதமிழ்ச் செல்வன்.. ஜெயபிரதீப் குற்றச்சாட்டு
தேனி: தேனி கைலாசப்பட்டியில் உள்ள கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய போது திமுகவினருக்கும் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் இடையே என்ன பிரச்சினை நடந்தது என்பது குறித்து ஜெயபிரதீப் வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.
தேனி கைலாசப்பட்டியில் உள்ள கோயிலில் கார்த்திகை தீபத்தை யார் ஏற்றுவது என்று ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் தங்கதமிழ்ச் செல்வன்- எம்எல்ஏ சரவணன் தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உண்மையில் அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் தனது பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: அருள்மிகு கைலாசநாதர் கோயில் தீபத் திருவிழா கடந்த 14 ஆண்டுகளாக அன்பர் பணி செய்யும் பரமரிப்பு குழுவினரால் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதை அறிந்து அந்த திருவிழாவுக்கு ஊறு விளைவிப்பதற்காக தேனி மாவட்ட திமுகவினரும் பெரியகுளம் சட்டசபை உறுப்பினர் சரவணனும் மிக அநாகரீகமாக நடந்து கொண்டனர். இந்த திருவிழா நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, கள்ளிப்பட்டி, கைலாசப்பட்டி, தேனி, பெரியகுளம், தாமரை குளம் போன்ற ஊர்களில் இருக்கும் பக்தர்களை அழைத்து திருவிழாவை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்துவோம்.

திருகார்த்திகை தீபம்
அதன்படி இந்த ஆண்டும் கூட்டம் போட்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த விழாவுக்கு பத்திரிகையடிக்க கோயிலின் நிர்வாக இயக்குநரிடம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் 15 நாட்களாக எந்த பதிலும் இல்லை. அதனால் அன்பர் பணி செய்யும் குழுவினரால் பத்திரிகை அடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன.

அழைப்பிதழ்
அப்போது பத்திரிகைகளை இங்கு விநியோக் செய்யக் கூடாது என கூறி அனைத்து பத்திரிகைகளையும் பறித்துக் கொண்டார்கள். பின்னர் அன்பர் பணி செய்யும் குழுவின் செயலாளர் சிவக்குமார அழைத்து பெரியகுளம் எம்எல்ஏ சரவணன்தான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என சொன்னார்கள். இதற்கு சிவக்குமார், நாங்கள் 15 ஆண்டுகளாக எங்களுடன் பணியாற்றிய சிவதொண்டனாக பணியாற்றிய ஓபிஎஸ்தான் வழிமுறைகளை கற்றுக் கொடுத்தார்.

கோயில் கட்டுதல்
இந்த கோயில் கட்டுவதற்கான அனைத்து நற்காரியங்களுக்கும் உதவிகளை செய்தார்கள். எனவே ஓபிஎஸ்தான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என கூறி பக்தர்கள் கூடி முடிவு எடுத்துள்ளோம். எனவே எம்எல்ஏ சரவணன் தீபம் ஏற்றுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிவிட்டார். பிறகு கோயிலின் நிர்வாக அதிகாரியிடம் நெருக்கடி கொடுக்கப்பட்டது. எனவே திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடத்த வேண்டும் என்பதால் நாங்கள் கோயிலின் பூசாரியே தீபத்தை ஏற்றட்டும் என விட்டுக் கொடுத்தோம்.

பெரியகுளம் எம்எல்ஏ
தீபத் திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன், கோயிலின் நிர்வாக அதிகாரி ஆகிய மூவரிடமும் ஆலோசனை கொடுங்கள் என கேட்டோம். ஆனால் அவர்கள் மூவருமே தீபத் திருவிழா நாளன்று வரை எந்த ஆலோசனையையும் கூறவில்லை. இன்று (நேற்று ) காலை கூட அவர்களை தொடர்பு கொண்டு எப்போது வருகிறீர்கள் என கேட்டோம். ஆனால் அவர்கள் பதில் சொல்லவில்லை. கார்த்திகை தீபத்தை ஏற்றும் போது 150க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் தேனி மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் , எம்எல்ஏ சரவணன் ஆகியோர் கோயில் நிர்வாக அதிகாரியை மிரட்டி, சரவணன்தான் தீபம் ஏற்ற வேண்டும் இல்லாவிட்டால் நீங்களே ஏற்றுங்கள் என்றனர்.

12 ஆண்டுகள்
ஆகம விதிகளின்படி கடந்த 12 ஆண்டுகளாக ராஜா பட்டர் சுவாமிகள் இந்த திருவிழாவை நடத்திக் கொண்டு வருகிறார். சிவனுக்கும் அம்பாளுக்கும் அகல் விளக்கம் ஏற்றி தீபாராதனை காட்டிய பிறகு உற்சவர் வலம் வந்து தீபத்தின் முன் சுவாமியை நிறுத்தி அப்போது மக்களின் கரகோஷத்துடன் தீபம் ஏற்றுவதுதான் வழக்கம். ஆயினும் நாங்கள் தங்கதமிழ்ச் செல்வனையும் சரவணனையும் அழைத்து வந்து பரிவட்டம் கட்டிக் கொள்ளுங்கள். தீபத்தை ஐயர் ஏற்றட்டும் என அழைத்தோம். ஆனால் அதை கேளாமல் அவர்களாகவே ஒரு தீப்பந்தத்தை எடுத்து வந்து தீபத்தை ஏற்ற முயன்றார்கள். அப்போது சிவன், அம்பாளுக்கு ஏற்றிய அகலில் இருந்துதான் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீங்கள் செய்வது தவறு என்றும் ராஜா பட்டர் சுவாமிகள் தடுத்தார். பின்னர் ராஜா பட்டர் தீபத்தை ஏற்றும் போது அவர்கள் தடுத்தார்கள். ஆனால் கடவுளின் பிரசித்தியால் தீபத்தை ராஜா பட்டர் சுவாமிகள் நல்லபடியாக ஏற்றினார். இவ்வாறு ஜெயபிரதீப் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications