பீன்ஸ் 1 கிலோ ரூ.290, கேரட் 1 கிலோ ரூ.190.. லாக்டவுனால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!
நெல்லை: நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தத. மூன்று மடங்கு விலை அதிகம் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர். உதாரணத்திற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பீன்ஸ் விலை 1 கிலோ - 290 ரூபாய்க்கும், கேரட் 1 கிலோ- 190 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 1 கிலோ என்கிற அளவிற்கு 100 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றும் இன்றும் மற்றும் அனைத்து கடைகளும் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது .
மக்கள் பலர் காய்கறிகளை மொத்தமாக வாங்க ஆர்வம் காட்டியதால் காய்கறிகள் விலை ஒரே நாளில் அதன் விலை மூன்று மடங்கு வரை உயர்ந்தது. காய்கறிகளை பொறுத்தவரை தேவை அதிகரித்தால், அதன் விலை அதிகரிக்கும். இதனை பயன்படுத்தி காய்கறி வியாபாரிகள் நேற்று வரை மிக குறைவாக விற்ற காய்கறிகளின் விலை மூன்று மடங்கு அதிகம் விலை வைத்து விற்பனை செய்தனர்.

விலை உச்சம்
மக்களோ நாளை முதல் நமக்கு எந்த பொருளும் கிடைக்காதோ என்ற அச்சத்தில் கிடைத்த காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கு குவித்தனர். நேற்று மாலை தொடங்கி இன்று மாலைக்குள் எல்லா காய்கறிகளின் விலை மிகப்பெரிய உச்சத்தை சந்தித்துள்ளன. பல இடங்களில் காய்கறிகள் ஸ்டாக் இல்லை என்கிற அளவிற்கு விற்றுவிட்டன. நெல்லை காய்கறி மார்க்கெட் நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

பீன்ஸ் 200 ரூபாய்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் நேற்று கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது அதேபோல் கேரட் கிலோ 200 ரூபாய்க்கும், அவரை பீன்ஸ் போன்ற காய்கறிகள் 200 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றன. இதேபோல் நேற்று வரை கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த பல்லாரி இன்று கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பொதுமக்கள் வேதனை
இதேபோல் முட்டைக்கோஸ் கத்திரிக்காய் போன்ற காய்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் வேறு வழி இல்லாமல் பெரும் குழப்பத்துடன் வாங்கி செல்கின்றனர். நேற்று வரை 1கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அவரைக்காய் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடும் விலை உயர்வினால் பொது மக்கள் மிகுந்த வேதனையுடன் காய்கறிகளை வாங்கி சென்றனர்

விலை மிக மிக அதிகம்
சென்னை நிலவரம் இன்னமும் மோசமாக உள்ளது. சென்னையில் பீன்ஸ் விலை 1 கிலோ - 290 ரூபாய்க்கும், கேரட் 1 கிலோ- 190 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 1 கிலோ என்கிற அளவிற்கு 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி தொடங்கி, பச்சை மிளகாய், வெங்காயம் எதை வாங்க நினைத்தாலும் அதன் விலை உச்சத்தில் தான் இருந்தது. விலை அதிகம் வைத்து விற்றால் நடவடிக்கை என அரசு எச்சரித்திருந்தது. ஆனால் யாரும் அதை மதிக்கவில்லை என்பதே உண்மை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications