நெற்கட்டும்செவலில் கலக்கிய ஓ.பன்னீர்செல்வம்! கிரேன் மூலம் ராட்சத மாலை! வரவேற்க நின்ற பெருங்கூட்டம்!
நெல்லை: நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு அங்கு கிடைத்த உற்சாக வரவேற்பு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
இப்படியொரு பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை அவருடன் சென்ற வைத்திலிங்கமே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
பூலித்தேவரின் 307-வது பிறந்தநாளையொட்டி நெற்கட்டும் செவலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவில் எழுந்துள்ள அதிகார மோதலுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு நகர்வும் கட்சி தொண்டர்களாலும் அரசியல் நோக்கர்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் முகாமிட்டு ஆதரவாளர்கள் சந்திப்பு ஆலோசனை என பிஸியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவர் சிலைக்கு அவரது மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக இன்று சென்றிருந்தார்.

ராட்சத மாலை
அங்கு முக்குலத்தோர் சமுதாய அமைப்பினரும், அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரே எதிர்பார்க்காத வகையில் வரவேற்பு கொடுத்து அசத்தியிருந்தனர். ராட்சத மாலையை கிரேன் மூலம் அணிவித்து 3 கிலோ மீட்டருக்கு மேல் திரண்டு நின்று அவரை வரவேற்று கூட்ட நெரிசலில் நீந்த வைத்திருக்கிறார்கள் ஆதரவாளர்கள். தனக்காக திரண்ட பழையக் கூட்டத்தை கண்ட பன்னீர்செல்வத்தின் முகமெல்லாம் ஒரே பூரிப்பு.

பிரச்சார வேன்
பிரச்சார வேனில் நின்றபடி இரு மருங்கிலும் நின்ற ஆதரவாளர்கள், பொதுமக்கள், முக்குலத்தோர் சமுதாய அமைப்பினர் என பலதரப்பட்டோரையும் பார்த்து வணக்கம் வைத்தபடியே பூலித்தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். இப்படியொரு பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை அவருடன் சென்ற வைத்திலிங்கமே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கூட்டம் திரண்டது எப்படி?
இதனிடையே அங்கு திரண்ட கூட்டம் குறித்த தகவல் எடப்பாடி பழனிசாமி டீமுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு எங்கிருந்து இவ்வளவு கூட்டம் திரண்டது என்ற ஆராய்ச்சியை தொடங்கியுள்ளதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு. எது எப்படியோ அதிமுகவில் ஏற்பட்ட களேபரங்களுக்கு பின்னர் முதல்முறையாக பொது நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு கண்ணியமான முறையில் கூட்டம் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு கோல்டன் வாய்ப்பு? அமித்ஷா தந்த பார்ட்னர்ஷிப் ட்விஸ்ட்! அப்ப 2.5 வருட கண்டிஷன்? -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications