நெற்கட்டும்செவலில் கலக்கிய ஓ.பன்னீர்செல்வம்! கிரேன் மூலம் ராட்சத மாலை! வரவேற்க நின்ற பெருங்கூட்டம்!
நெல்லை: நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு அங்கு கிடைத்த உற்சாக வரவேற்பு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
இப்படியொரு பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை அவருடன் சென்ற வைத்திலிங்கமே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
பூலித்தேவரின் 307-வது பிறந்தநாளையொட்டி நெற்கட்டும் செவலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவில் எழுந்துள்ள அதிகார மோதலுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு நகர்வும் கட்சி தொண்டர்களாலும் அரசியல் நோக்கர்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் முகாமிட்டு ஆதரவாளர்கள் சந்திப்பு ஆலோசனை என பிஸியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவர் சிலைக்கு அவரது மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக இன்று சென்றிருந்தார்.

ராட்சத மாலை
அங்கு முக்குலத்தோர் சமுதாய அமைப்பினரும், அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரே எதிர்பார்க்காத வகையில் வரவேற்பு கொடுத்து அசத்தியிருந்தனர். ராட்சத மாலையை கிரேன் மூலம் அணிவித்து 3 கிலோ மீட்டருக்கு மேல் திரண்டு நின்று அவரை வரவேற்று கூட்ட நெரிசலில் நீந்த வைத்திருக்கிறார்கள் ஆதரவாளர்கள். தனக்காக திரண்ட பழையக் கூட்டத்தை கண்ட பன்னீர்செல்வத்தின் முகமெல்லாம் ஒரே பூரிப்பு.

பிரச்சார வேன்
பிரச்சார வேனில் நின்றபடி இரு மருங்கிலும் நின்ற ஆதரவாளர்கள், பொதுமக்கள், முக்குலத்தோர் சமுதாய அமைப்பினர் என பலதரப்பட்டோரையும் பார்த்து வணக்கம் வைத்தபடியே பூலித்தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். இப்படியொரு பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை அவருடன் சென்ற வைத்திலிங்கமே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கூட்டம் திரண்டது எப்படி?
இதனிடையே அங்கு திரண்ட கூட்டம் குறித்த தகவல் எடப்பாடி பழனிசாமி டீமுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு எங்கிருந்து இவ்வளவு கூட்டம் திரண்டது என்ற ஆராய்ச்சியை தொடங்கியுள்ளதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு. எது எப்படியோ அதிமுகவில் ஏற்பட்ட களேபரங்களுக்கு பின்னர் முதல்முறையாக பொது நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு கண்ணியமான முறையில் கூட்டம் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை!












Click it and Unblock the Notifications