இந்தியை எவராலும் திணிக்க முடியாது.. ஆனால்.. திருவண்ணாமலையில் அமைச்சர் ரோஜா!
திருவண்ணாமலை: இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா தெரிவித்தார்.
Recommended Video
சித்ரா பவுர்ணமியையொட்டி ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ரோஜா திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று வருகை தந்தார்.
அப்போது அவர் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் ஆகியோரை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அண்ணாமலையாரை பார்க்க முடியவில்லை
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அண்ணாமலையாரை பார்க்காமல் இருந்தது மிகவும் வருத்தம் அளித்தது. தற்போது அண்ணாமலையாரை தரிசனம் செய்தது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. கடந்த காலங்களில் கஷ்டங்களை அனுபவித்தேன்.

கஷ்டங்கள்
ஆனால் கிரிவலம் வந்த பிறகு எனது கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து போனது. தெலுங்கு தேசம் கட்சியில் என்னை வளரவிடாமல் இரு முறை அக்கட்சியினரே தோற்கடித்தனர். மூன்றாவது முறை தான் இங்கே வந்து கிரிவலம் மேற்கொண்டேன். இதையடுத்து அப்போது நடந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றேன்.

அமைச்சர் பதவி
என்னை சகோதரியாக ஏற்று எனக்கு அமைச்சர் பதவி வழங்கினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. எனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தற்போது அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டேன். எனக்கு அமைச்சர் பதவி கிடைத்த போது ஆந்திரா மக்கள் எப்படி சந்தோஷப்பட்டனரோ அது போல் தமிழக மக்களும் சந்தோஷம் பெற்றிருப்பர்.

ஆட்சி அருமை
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி மிகவும் அருமையாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினை நான் எதிர்பார்த்தது வேறு மாதிரியாக இருந்தது. ஆனால் அவர் மிகவும கண்ணியமாக ஆட்சியை நடத்தி வருகிறார். மக்கள் கோரிக்கை வைத்தால் போதும் மின்னல் வேகத்தில் அதை அவர் செய்து முடிப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இந்தி கட்டாயம் தேவை
ஆந்திர தமிழக எல்லையில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இரு முதல்வர்களும் செய்து வருகிறார்கள். இந்தியை எவராலும் திணிக்க முடியாது. ஆனால் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தாய்மொழியுடன் இணைந்து ஆங்கிலமும் இந்தியும் கட்டாயம் தேவை. அனைத்து மொழிகளையும் பயின்றால்தான் நல்ல முறையில் முன்னேற்றங்களை அடைய முடியும்.

இந்தி மட்டுமே தெரியும்
மத்திய அமைச்சர்கள் பலருக்கு இந்தி மட்டுமே தெரிந்துள்ளது. நமது மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை கேட்டு பெற இந்தி கட்டாயம் வேண்டும் என்றார். தென்னிந்தியாவில் இந்தி பேசும் மக்கள் குறைவாக இருப்பதால் அந்த மொழியை கற்குமாறு திணிக்க கூடாது என்ற நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது. அதையேதான் அமைச்சர் ரோஜாவும் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications