திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன 400 ரூபா சம்பளமா? என் கூட வாங்க 2 ஆயிரம் சம்பாதிக்கலாம்! கடைக்காரரை தெறிக்க விட்ட பிச்சைக்காரர்

Google Oneindia Tamil News

திருப்பூர் : திருப்பூரில் கடையில் பிச்சை எடுத்த இளைஞரை கடை உரிமையாளர் அழைத்த நிலையில், "400 ரூபாய்க்கு வேலை செய்யனுமா..? ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பாதிக்கிறேன்" என பதிலளித்த வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

    400 ரூபா சம்பளமா? என் கூட வாங்க 2 ஆயிரம் சம்பாதிக்கலாம்!..தெறிக்க விட்ட பிச்சைக்காரர்.

    ஜவுளி மற்றும் பனியன் போன்ற ஆயத்த ஆடைகள் தொழிலில் தொழிலில் பிரசித்தி பெற்ற திருப்பூர் மாவட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    அவ்வாறு வந்து செல்லும் வியாபாரிகளை பிச்சைக்காரர்கள் அதிக அளவில் தொல்லை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

    பிச்சைக்காரர்கள் தொல்லை

    பிச்சைக்காரர்கள் தொல்லை

    அதுமட்டுமல்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள் குறித்த புகார்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு குவிந்த வண்ணம் உள்ளன. இலையில் பிச்சை எடுத்த இளைஞரை வேலைக்கு அழைத்த கடைக்காரரை பிச்சை எடுக்க கூப்பிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்கள் தினமும் பிச்சை எடுப்பது வழக்கம்.

    கடையில் பிச்சை

    கடையில் பிச்சை

    இந்நிலையில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுத்த நபர் ஒருவர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பிச்சை கேட்டுள்ளார். அப்போது, அந்தக் கடையின் உரிமையாளர், கை கால்கள் நன்றாக தானே இருக்கிறது என் கடைக்கு வேலைக்கு வா சம்பளம் தருகிறேன் என கூறி உள்ளார்.

    400 ரூபாய் சம்பளமா?

    400 ரூபாய் சம்பளமா?

    சம்பளம் எவ்வளவு தருவாய் என அந்த பிச்சை எடுக்கும் நபர் கேட்டபொழுது 400 ரூபாய் ஒரு நாளைக்கு தருகிறேன் என கூறி உள்ளார். அதற்கு அந்த பிச்சை எடுத்த நபரோ 400 ரூபாய்க்கு நான் வேலை செய்ய வேண்டுமா? நான் ஒரு நாளைக்கு 2000 சம்பாதிக்கிறேன் என ஏளனமாக பதில் அளிக்கிறார். அதற்கு உரிமையாளர் இப்படி ஓசியா கொடுத்தால் கொடுத்தால் நீ சம்பாதிக்க தான் செய்வாய் என கூறுகிறார்.

    தினமும் 2000 ரூபாய்

    தினமும் 2000 ரூபாய்

    பிச்சை கொடுப்பதாக இருந்தால் இருக்கு என சொல்லுங்கள். இல்லை என்றால் இல்லை என சொல்லுங்கள். நீ வா என்னோடு உனக்கு 2000 தருகிறேன் எனக் கூறியபடி அந்த பிச்சை எடுக்கும் நபர் அங்கிருந்து செல்கிறார். கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    English summary
    When a shop owner called a young man who was begging at a shop in Tirupur, he asked, “Do you want to work for 400 rupees ..? I earn 2000 rupees a day. ”The video is spreading fast on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X