செம.. வாழ்ந்தால் இப்படித்தான் வாழணும்.. அபூர்வ பிறவி.. திரும்பி பார்க்க வைத்த ருக்மணியம்மாள்!
திருச்சி: 100 வயசை கடந்த ஒரு பாட்டி நல்ல கண்பாா்வை, கேட்புத்திறன் உள்ளிட்ட முழு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்.. அவர் பெயர்தான் ருக்மணியம்மாள்.. சுமாா் 27 பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா் மூதாட்டி ஒருவா். இவருக்குதான் தமிழக மக்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள வடவோ் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ராமச்சந்திரன்-ருக்மணியம்மாள் தம்பதி... கல்யாணம் ஆனதும், பிழைப்புத் தேடி திருச்சிக்கு வந்துவிட்டனர்... ராமச்சந்திரன் 1905-ம் ஆண்டும், ருக்மணியம்மாள் 1920-ம் ஆண்டிலும் பிறந்தவா்கள்.. வருஷம் தெரிகிறதே பிறந்த மாசம், தேதி சரியாக தெரியவில்லையாம்.. நினைவும் இல்லையாம்.

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை அஞ்சலகம் அருகேயுள்ள ஒரு சிறு அக்ரஹார குடியிருப்பில் தங்களது வாழ்க்கையைத் தொடங்கினா். தற்போது அந்த குடியிருப்பு வளாகம் விற்கப்பட்டு, தனியாா் மருத்துவமனை, ஜவுளிக் கடைகள் அமைந்துள்ளன. இவர்களுக்கு 6 ஆண், 3 பெண் குழந்தைகள்.. இவர்களை கூலி வேலை பாா்த்தே படிக்க வைத்து ஆளாக்கினர்.. இவர்களின் வாரிசுகள் எல்லாருமே பல்வேறு மத்திய, மாநில துறைகளில் பணிபுரிந்த நிலையிலும், சிலா் ஓய்வுபெற்றும் உள்ளனா்.
பாட்டியின் கணவரும், ஒரு மகளும் இறந்துவிட்டனர்.. மற்ற 8 வாரிசுகள் உள்ளனர்.. மேலும் அந்த வாரிசுகளுக்கு 9 பேரன்கள், 7 பேத்திகள்.. அவங்களுக்கும் கல்யாணமாகி 6 கொள்ளுப் பேரன்கள், 5 கொள்ளுப் பேத்திகள் என மூன்றாவது தலைமுறையினருடன் நல்ல ஆரோக்கியத்துடனும் இந்த பாட்டி இருக்கிறார்.. தற்போது புத்தூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே ஆபிஸர்ஸ் காலனியில் உள்ள அபார்ட்மென்ட்டில் இவரது குடும்பத்தினா் வசித்து வருகின்றனர்.
வயோதிகம், முதுமை பிரச்னைகள் தவிர மற்ற நோய்கள் ஏதுமின்றி, நல்ல கண்பாா்வை கேட்புத்திறனுடன் இருக்கிறார்.. ஏதாவது படிக்க வேண்டும் என்றால் கண்ணாடி போடுகிறார்.. கடந்த வருடம் இவர் வழுக்கி விழுந்துட்டாராம்.. அதனால், இடுப்பில் மட்டும் கொஞ்சம் பாதிப்பு இருக்கிறது.. அதனால், இரும்புக் கம்பி துணையுடன் நடக்கிறாார்.. பாட்டிக்கு நல்ல குரல் இருக்கிறது.. அதனால் தினமும், இஷ்ட தெய்வங்களைப் போற்றி சுலோகங்கள், பாசுரங்கள் பாடிக் கொண்டே இருப்பாராம்.
காலை மாலைகளில் தீபமேற்றி, பூஜை செய்து நைவேத்யம் செய்தவற்றை பிள்ளைகளுக்கு வழங்கி தானும் சாப்பிடுகிறார்.. கலப்படமில்லா கடந்த கால உணவுகளைதான் இப்போதும் சாப்பிடுகிறாராம்.. முதியோா் தினமான கடந்த வியாழக்கிழமை அவரிடம் நிறைய பேர் சென்று ஆசி பெற்று வந்தார்களாம்.. பாட்டியை நேரில் பார்க்க முடியாத எத்தனையோ வெளிநாட்டு வாசிகள், வீடியோ மூலம் பாட்டியிடம் ஆன்லைனிலேயே ஆசீர்வாதம் வாங்கி கொண்டார்கள்... பாட்டி இன்னும் பல ஆண்டுகள் வாழ நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications