தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை.. கரும்பு, பொங்கல் பானைகள்.. பொருட்கள் விற்பனை மும்முரம்
Recommended Video
திருச்சி: தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்சியில் கரும்பு, பொங்கல் பானைகள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
தமிழா்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவது பொங்கல்திருநாள்தான். போகிப் பண்டிகையில் தொடங்கி காணும் பொங்கல் வரை 4 நாள்களுக்கு கொண்டாட்டம் நிகழும்.

பழையன கழிதலும்- புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகியும், அனைத்து உயிர்கள் இயக்கத்துக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தை முதல்நாளில் சூரியப் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளைச் சிறப்பிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. திருநாளின் கடைசி நாளில், காணும் பொங்கலாக சுற்றுலாப் பகுதிகளுக்குச் சென்று பொதுமக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
இதைத் தவிர, பொங்கல் திருநாளையொட்டி கிராமங்களில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதும் தொடா்ந்து நிகழ்ந்து வருகிறது. பொங்கல் திருநாள் புதன்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சியில் பொங்கல் பானைகள், செங்கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருள்கள் விற்பனையும் களைகட்டத் தொடங்கியுள்ளது. பூலாம்பூ, ஆவாரம்பூ, மஞ்சள் கொத்து வாங்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது.மண்பானையின் பயன்பாடு பல ஆண்டுகளாக குறைந்துள்ளதால் விற்பனை எதிர்பார்த்தளவு இல்லை. பொங்கல் பானைகள் ரூ. 50 லிருந்து, 300 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
திருச்சி, திண்டுக்கல், கரூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து செங்கரும்பு, வாழை பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஜோடி கரும்புகள் ரூ.100- க்கும், மஞ்சள் கொத்து, ரூ. 10- க்கும் விற்கப்பட்டது.காப்பு கட்டுவதற்காக பூலாம்பூக்கள், மாவிலை, வேப்பிலை, நாணல்கள் அடங்கிய ஒரு கட்டு, ரூ.20 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைப்பழத் தார் ஒன்று ரூ. 250 முதல், 500 -க்கு விற்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் விதவிதமான வண்ணக்கோலப்பொடிகள், காய்கறிகள் விற்பனையும் களைக்கட்டியது. பொங்கல் பொருள்கள் வாங்க குவிந்ததால் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
பொங்கல் பொருள்களின் விலை பெரியளவில் மாற்றம் ஏதுமில்லை. கடந்தாண்டு போலவே கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்களின் விலை உள்ளது. வாழைப்பழங்களின் விலை மட்டுமே தாருக்கு, 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் பூக்களின் விலை திங்கள்கிழமை உயா்ந்து காணப்பட்டது. மல்லிகை கிலோ ரூ. 1000லிருந்து 2000-த்துக்கும், முல்லைப்பூ ரூ.800- லிருந்து 1500-க்கும், ஜாதிப்பூ ரூ.600- லிருந்து 800-க்கும், செவ்வந்தி ரூ.50 -லிருந்து 100-க்கும், சம்மங்கிரூ.100-லிருந்து 120-க்கும், ரோஜா ரூ.80- லிருந்து ரூ.100-க்கும் என அதிரடியாக உயா்ந்து விற்பனை செய்யப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications