மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் 19 மாவட்டங்களில் குடிப்பதற்கே தண்ணீர் மிஞ்சாது.. வைகோ எச்சரிக்கை
திருச்சி: தமிழகத்தில் நீர்நிலைகளை உரிய நேரத்தில் தூர்வாராமல் விட்டது தான், மிக தீவிர தண்ணீர் பிரச்சனை ஏற்பட காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என புகார் கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகயை துரிதமாக எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் மழை வரும் தண்ணீர் பிரச்சனை தீரும் என அவர்களாகவே கற்பனை செய்து கொண்டிருக்காமல், களத்தில் இறங்கி மக்கள் துயர் துடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தண்ணீர் பிரச்சனை இன்னும் 15 நாட்களில் மிக மோசமான நிலையை எட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது என கவலை தெரிவித்தார்.
நீர் நிலைகளை தூர்வார வேண்டிய நேரத்தில் தூர்வாரவில்லை. கால்வாய்களை சரி செய்யவில்லை. தமிழக அரசு உரிய நேரத்தில் நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தியிருந்தால், அதிகமான தண்ணீர் தேங்கியிருந்திருக்கும்.
ஓரளவு குடிநீர் பிரச்சனையை சமாளிப்பதற்கு நமக்கொரு வாய்ப்பு கிடைத்திருக்கும். வேலை செய்ய வேண்டிய நேரத்தில் மக்கள் பணி செய்யாமல், விட்டதன் விளைவை தற்போது மக்கள் தானே அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என வைகோ ஆதங்கம் தெரிவித்தார்.
தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் தவிக்கிற நிலைமை பார்த்தால் கடும் வேதனை ஏற்படுவதாக குறிப்பிட்டார். குடிநீருக்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடைகால குடிநீர் விநியோகத்துக்காக தமிழக அரசு ரூ.400 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், மாற்று வழிகளைப் பயன்படுத்தி தண்ணீர் பற்றாக்குறையை போக்க விரைந்து செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
தற்போதே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றால், ஒருவேளை கர்நாடக அரசு திட்டமிட்டபடி மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் தமிழகத்திலே தலைநகர் சென்னை உட்பட 19 மாவட்டங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத ஒரு பேரபாயம் ஏற்பட்டுவிடும் என கடுமையாக எச்சரித்தார்.
எனவே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications