அடுத்தடுத்து தொடரும் நில அதிர்வுகள்.. வேலூர்தான் மையம்.. ஏன் இப்படி?
வேலூர்: வேலூரில் தொடர்ந்து 3ஆவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுவரை வேலூர் சுற்று வட்டாரத்தில் சமீபத்தில், எந்தெந்த தேதிகளில் இது போன்ற நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
Recommended Video
நவம்பர் 29, 2021- திருப்பத்தூரை மையமாக கொண்டு அதிகாலை 4.15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. வாணியம்பாடி அருகே ராமநாயக்கன்பேட்டை, தும்பேரி கிராமத்தினர் இந்த அதிர்வை உணர்ந்தனர். எனினும் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என வருவாய் துறை தகவல்.
எனினும் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தட்டபாறை கிராமத்தில் செல்வம் என்பவரின் வீட்டில் விரிசல் எழுந்தது. இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

பெங்களூர் ்ருகே
டிசம்பர் 22: பெங்களூரில் அடுத்தடுத்து இரு முறை நில அதிர்வு. பெங்களூரின் அண்டை பகுதியான, சிக்கபல்லாபுரத்தில் 11 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது 3.3 ரிக்டர் அளவாக பதிவானது. காலை 7 மணி ஒன்றும் காலை 7.15 மணிக்கு இன்னொன்றும் ஏற்பட்டதாக தகவல்.

சித்தூர்
டிசம்பர் 23: சித்தூரில் மதியம் 3.15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. பூமியிலிருந்து 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே டிடி மோட்டூர், தரைக்காடு ஆகிய பகுதிகளில் வீட்டிலிருந்த பொருட்கள் விழுந்தன. இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

பேர்ணாம்பட்டு
டிசம்பர் 25: வேலூர் பேர்ணாம்பட்டு அருகே 3ஆவது முறையாக இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பேரணாம்பட்டில் தொடர்ந்து 3ஆவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் இதற்கு காரணம் என்ன என்பது குறித்து புவியியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். எனினும் இதுவரை வந்த நிலஅதிர்வுகளுக்கு காரணம் கண்டறியப்படவில்லை.

ஆய்வு பணி
பேரணாம்பட்டை அடுத்த தரைக்காடு பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் ஒரு தனியார் பல்கலைக்கழக புவியியல் ஆராய்ச்சி பேராசிரியர் உள்ளிட்டோர் தரைக்காடு பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்தபோதே நில அதிர்வை உணர்ந்துள்ளனர். இதனால் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

முகாம்கள்
இதனிடையே நிருபர்களிடம் பேசிய ராமமூர்த்தி, நில அதிர்வை பார்த்து மக்கள் பயப்பட வேண்டாம். நில அதிர்வால் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோரை முகாம்களுக்கு மாற்றி அரசு சார்பில் அவர்களுக்கு உதவிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications