அடுத்தடுத்து தொடரும் நில அதிர்வுகள்.. வேலூர்தான் மையம்.. ஏன் இப்படி?
வேலூர்: வேலூரில் தொடர்ந்து 3ஆவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுவரை வேலூர் சுற்று வட்டாரத்தில் சமீபத்தில், எந்தெந்த தேதிகளில் இது போன்ற நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
Recommended Video
நவம்பர் 29, 2021- திருப்பத்தூரை மையமாக கொண்டு அதிகாலை 4.15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. வாணியம்பாடி அருகே ராமநாயக்கன்பேட்டை, தும்பேரி கிராமத்தினர் இந்த அதிர்வை உணர்ந்தனர். எனினும் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என வருவாய் துறை தகவல்.
எனினும் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தட்டபாறை கிராமத்தில் செல்வம் என்பவரின் வீட்டில் விரிசல் எழுந்தது. இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

பெங்களூர் ்ருகே
டிசம்பர் 22: பெங்களூரில் அடுத்தடுத்து இரு முறை நில அதிர்வு. பெங்களூரின் அண்டை பகுதியான, சிக்கபல்லாபுரத்தில் 11 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது 3.3 ரிக்டர் அளவாக பதிவானது. காலை 7 மணி ஒன்றும் காலை 7.15 மணிக்கு இன்னொன்றும் ஏற்பட்டதாக தகவல்.

சித்தூர்
டிசம்பர் 23: சித்தூரில் மதியம் 3.15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. பூமியிலிருந்து 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே டிடி மோட்டூர், தரைக்காடு ஆகிய பகுதிகளில் வீட்டிலிருந்த பொருட்கள் விழுந்தன. இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

பேர்ணாம்பட்டு
டிசம்பர் 25: வேலூர் பேர்ணாம்பட்டு அருகே 3ஆவது முறையாக இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பேரணாம்பட்டில் தொடர்ந்து 3ஆவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் இதற்கு காரணம் என்ன என்பது குறித்து புவியியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். எனினும் இதுவரை வந்த நிலஅதிர்வுகளுக்கு காரணம் கண்டறியப்படவில்லை.

ஆய்வு பணி
பேரணாம்பட்டை அடுத்த தரைக்காடு பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் ஒரு தனியார் பல்கலைக்கழக புவியியல் ஆராய்ச்சி பேராசிரியர் உள்ளிட்டோர் தரைக்காடு பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்தபோதே நில அதிர்வை உணர்ந்துள்ளனர். இதனால் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

முகாம்கள்
இதனிடையே நிருபர்களிடம் பேசிய ராமமூர்த்தி, நில அதிர்வை பார்த்து மக்கள் பயப்பட வேண்டாம். நில அதிர்வால் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோரை முகாம்களுக்கு மாற்றி அரசு சார்பில் அவர்களுக்கு உதவிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications