“தமிழகத்தில் பெண் போலீசுக்கே பாதுகாப்பில்லை”... மதுரையில் தமிழிசை பரபர குற்றச்சாட்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு முடிவு கட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், தமிழகம் உட்பட சில மாநிலங்கள் அதற்கு உரிய ஒத்துழைப்பு தருவதில்லை' எனக் குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகமாகி வருவதாக வேதனை தெரிவித்த தமிழிசை, சட்டசபையில் பெண் போலீஸ் ஒருவரே தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக பேசுகையில், 'தமிழகத்தில் பெண் போலீசுக்கே பாதுகாப்பில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது' என்றார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications