திடீர் வெள்ளப்பெருக்கு.. சதுரகிரி மலைக்கோயிலுக்கு சென்ற 100க்கு மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு சென்ற 100க்னக்கான பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவிப்புக்கு உள்ளாகினர். இதனிடையே அவர்கள் அனைவரும் மலையடிவார பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications