Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்வதேச அளவில் வன்முறைகளால் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான்.. ஜோ பைடன் கவலை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சர்வதேச அளவில் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் மாளிகையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார்.

Muslims Being Targeted With Violence: US President Joe Biden

இந்த நிகழ்ச்சியில் ஜோ பைடன் பேசியதாவது: உலகம் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறது. ஆனால் அனைத்து இஸ்லாமியர்களும் இந்த ரம்ஜானை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Muslims Being Targeted With Violence: US President Joe Biden

உலகின் பல நாடுகளில் வறுமை, ஏழ்மை, வன்முறை, நோய் பரவல் என்கிற நிலைமை நீடிக்கிறது. உலக நாடுகளில் அமைதி ஏற்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. இதற்கான அறிகுறிகள் உள்ளன. உலகம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்போதைய தருணத்தில் பல நாடுகளில் ரம்ஜான் பண்டிகையை அமைதியாக கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு விதமான சவால்களும், சோதனைகளும் தொடருவதை நாம் ஏற்றாக வேண்டும். இஸ்லாமியர்களால்தான் ஒவ்வொரு நாளும் அமெரிக்கா வலிமை பெற்று வருகிறது. அவர்களது உழைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. உலகளவில் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான். சர்வதேச அமைப்புகளுக்கு நான் இஸ்லாமியரைத்தான் தூதராக அமைத்துள்ளேன். ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியாத உய்குர்ஸ், ரோஹிங்கியா இன மக்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+