கொரோனாவை தடுக்க காசநோய், போலியோ நோய்க்கான தடுப்பூசியை கொடுக்கலாமா?.. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
வாஷிங்டன்: அமெரிக்கா விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்புக்கு காசநோய் தடுப்பூசி அல்லது போலியோ தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வைரஸை தடுக்க உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள். எனினும் கொரோனா வைரஸ் தொற்று வராமல் தடுப்பதற்கு இன்று வரை மருந்து சந்தைக்கு வரவில்லை.
தடுப்பூசி சோதனை முயற்சிகள் வெற்றி கண்டு தயாரிக்கும் நிலை உருவாகவில்லை. 700 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான மருந்து தயாரிப்பது மிகவும் கடினமாகும். எனவே அடுத்த ஆண்டுதான் அனைவருக்கும் தடுப்பூசி என்பது சாத்தியமாகும்.

கொரோனா
இத்தனை நீண்ட காலம் காத்திருக்கும் நிலையில் நாம் இப்போது இல்லை. அதிலும் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்து வரும் அமெரிக்கா தயாராக இல்லை. அரிசோனா, கரோலினா, ப்ளோரிடா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் கொரோனா காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

மும்முரம்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக உள்ளது. எனவே இங்கு கொரோனாவை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என அந்நாட்டு விஞ்ஞானிகள் மருந்து கண்டுப்பிடிப்பில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

மருத்துவக் குழுவினர்
இதுகுறித்து டெக்சாஸ் மாகாணத்தின் நோய் எதிர்ப்புத் துறை பேராசிரியர் ஜெப்ரி டி சிரில்லோ கூறுகையில் இப்போதைக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதே தடுப்பூசி ஆகும். கொரோனா நோய்க்கு போலியோ தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து மருத்துவ குழுவினர் ஆராய்ந்து வருகிறார்கள்.

யோசனை
அது போல் காசநோய்க்காகன தடுப்பூசியான பேசிலஸ் கால்மெட் குய்ரின் என்ற மருந்து அமெரிக்காவில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே கொரோனா வைரஸுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாமா என்ற யோசனையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Recommended Video

ஆராய்ச்சியாளர்கள்
பிசிஜி தடுப்பூசியால் பிற நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் திறன் கொண்டுள்ளது. இந்த தடுப்பூசியை ஒரு சில புற்றுநோய்களுக்கு மருந்தாக கொடுக்கிறார்கள். எனவே அதை பயன்படுத்தி சோதனை நடத்தவும் ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications