கொரோனாவை தடுக்க காசநோய், போலியோ நோய்க்கான தடுப்பூசியை கொடுக்கலாமா?.. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
வாஷிங்டன்: அமெரிக்கா விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்புக்கு காசநோய் தடுப்பூசி அல்லது போலியோ தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வைரஸை தடுக்க உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள். எனினும் கொரோனா வைரஸ் தொற்று வராமல் தடுப்பதற்கு இன்று வரை மருந்து சந்தைக்கு வரவில்லை.
தடுப்பூசி சோதனை முயற்சிகள் வெற்றி கண்டு தயாரிக்கும் நிலை உருவாகவில்லை. 700 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான மருந்து தயாரிப்பது மிகவும் கடினமாகும். எனவே அடுத்த ஆண்டுதான் அனைவருக்கும் தடுப்பூசி என்பது சாத்தியமாகும்.

கொரோனா
இத்தனை நீண்ட காலம் காத்திருக்கும் நிலையில் நாம் இப்போது இல்லை. அதிலும் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்து வரும் அமெரிக்கா தயாராக இல்லை. அரிசோனா, கரோலினா, ப்ளோரிடா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் கொரோனா காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

மும்முரம்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக உள்ளது. எனவே இங்கு கொரோனாவை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என அந்நாட்டு விஞ்ஞானிகள் மருந்து கண்டுப்பிடிப்பில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

மருத்துவக் குழுவினர்
இதுகுறித்து டெக்சாஸ் மாகாணத்தின் நோய் எதிர்ப்புத் துறை பேராசிரியர் ஜெப்ரி டி சிரில்லோ கூறுகையில் இப்போதைக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதே தடுப்பூசி ஆகும். கொரோனா நோய்க்கு போலியோ தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து மருத்துவ குழுவினர் ஆராய்ந்து வருகிறார்கள்.

யோசனை
அது போல் காசநோய்க்காகன தடுப்பூசியான பேசிலஸ் கால்மெட் குய்ரின் என்ற மருந்து அமெரிக்காவில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே கொரோனா வைரஸுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாமா என்ற யோசனையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Recommended Video

ஆராய்ச்சியாளர்கள்
பிசிஜி தடுப்பூசியால் பிற நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் திறன் கொண்டுள்ளது. இந்த தடுப்பூசியை ஒரு சில புற்றுநோய்களுக்கு மருந்தாக கொடுக்கிறார்கள். எனவே அதை பயன்படுத்தி சோதனை நடத்தவும் ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications