தமிழ்நாடு நாள்: தாய்நிலத்துக்கு தமிழ்நாடு என தலைமகன் அண்ணா பெயர் சூட்டிய நாள் ஜூலை 18
சென்னை: சென்னை மாகாணம், மதராஸ் மாகாணம், மெட்ராஸ் மாகாணம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட நமது தாய்நிலத்துக்கு தமிழ்நாடு என தமிழினத்தின் தலைமகனாக கொண்டாடப்படும் மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர் சூட்டிய நாள் ஜூலை 18.
Recommended Video
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ந் தேதியை பல்வேறு மாநிலங்கள் தங்களது மாநில நாளாக கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நவம்பர் 1 என்பது போராட்ட நாள்.. ஆம் பிற மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது தாய்நிலமான தமிழ்நாடு பல பகுதிகளைப் பறிகொடுத்தது. அதனை மீட்டெடுக்க தமிழாய்ந்த தமிழர்கள் போராடினார்கள். ஆகையால் நவம்பர் 1-ந் தேதி நமக்குப் போராட்ட நாள்.. தமிழ்நாடு என நமது மாநிலத்துக்கு பேரறிஞர் அண்ணா பெயரிட்ட ஜூலை 18-ந் தேதி தான் தமிழ்நாடு நாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரகடனம் செய்தார். தமிழ்நாடு நாள் இன்று பேரெழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் ஏன்?
- நாடு விடுதலைக்குப் பின்னர் 1956-ல் மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன
- மொழிகள் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை மாகாணப் பகுதிகள் சில
- ஹைதராபாத், திருவிதாங்கூர், மைசூர் மாகாணங்களின் பல பகுதிகளுடன் இணைக்கப்பட்டு
- ஆந்திரா, கேரளா, கர்நாடகா என புதிய மாநிலங்கள் உருவாகின
- எஞ்சிய நிலப் பகுதிகளைக் கொண்ட நமது மாநிலம் சென்னை மாகாணம், மெட்ராஸ் மாகாணம், மதராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது.
- 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் நமது சென்னை மாகாணம் என்ற மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார் மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா
- நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 ஆண்டுதோறும் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படும் என பிரகடனம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட வரலாறு
- 1956-ல் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட கோரி சங்கரலிங்கனார் 73 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் நீத்தார்
- 1960, 1961-ல் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன
- 1962-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பூபேஷ் குப்தா எம்.பி, சென்னை மாகாணத்துக்கு
- தமிழ்நாடு என மாற்றம் செய்ய மசோதா தாக்கல் செய்தார். இம்மசோதா தோற்கடிக்கப்பட்டது
- 1964-ல் சென்னை மாகாண சட்டசபையில் திமுகவின் ராம.அரங்கண்ணல் எம்.எல்.ஏ. தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானம் கொண்டுவந்தார். இத்தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது
- 1967-ல் திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களால் ஜூலை 18-ல் தமிழ்நாடு என சென்னை மாகாணத்தின் பெயர் மாற்றி அமைக்கப்பட்டது.
- ஆகையால் ஜூலை 18 தமிழ்நாடு நாள் என முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.
-
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications