Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொட்டும் மழை.. ஐயப்பனை காண சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்..எங்கும் எதிரொலிக்கும் சரண கோஷம்

Subscribe to Oneindia Tamil

சபரிமலை: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை எங்கும் சரண கோஷம் எதிரொலித்து வருகிறது.

கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த புதன்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கொட்டும் மழைக்கு இடையே தரிசனம் செய்தனர்.

முதல் நாளான வியாழக்கிழமை மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

இரண்டாவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நண்பகல் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது தீபாராதனை, புஷ்பாபிஷேகம் மற்றும் அத்தாழ பூஜைகள் நடைபெற்றன. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மழையிலும் தரிசனம்

மழையிலும் தரிசனம்

சபரிமலையிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்தபோதும், பக்தர்கள் நனைந்தவாறு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பம்பை, நிலக்கல், எரிமேலி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், மலை ஏறுவதற்கு சிரமமாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள்

லட்சக்கணக்கான பக்தர்கள்

இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிகாலை முதலே ஐயப்பனை தரிசனம் செய்ய அலைமோதி வருகின்றனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று காலை 7 மணி வரை 25 ,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று வரை 1 லட்சத்து 28 ,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

அருவிகளில் ஆனந்த குளியல்

அருவிகளில் ஆனந்த குளியல்

சபரிமலையில் தரிசனம் முடித்துவிட்டு, கன்னியாகுமரி வழியாக திரும்பும் பக்தர்கள், திற்பரப்பு அருவியில் ஆனந்தக் குளியல் போடுகின்றனர். தென்காசி வழியாக ஊர் திரும்பும் பக்தர்கள் குற்றால அருவிகளிலும் குளித்து விட்டு திருக்குற்றால நாதரை தரிசனம் செய்கின்றனர். தை மாதம் வரை சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், திற்பரப்பு அருவிக்கும், குற்றால அருவிகளுக்கும் வருவார்கள் என்பதால் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+