திருச்செந்தூரில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்.. மொய் எழுதிய பக்தர்கள்
தூத்துக்குடி:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் மொய் எழுதினர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 6ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோவில் கடற்கரையில் நடந்தது. விழாவின் இறுதி நாளான 7-ம் நாளான இன்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனையம், உதய மார்த்தாண்ட அபிஷேகமமும் நடந்தது.

இரவில் ராஜகோபுரம் முன்பு உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.
சுவாமிமலையில் நேற்றிரவு சண்முகர் தேவசேனா திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக முதலில் மாலை மாற்றும் வைபவமும் அதனை தொடர்ந்து ஊஞ்சலில் நலங்கு வைக்கும் நிகழ்வும் நடைபெற்ற பிறகு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அக்னியாகம் வளர்த்து மங்கள நாண் பூட்ட தேவசேனா திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்ட பிறகு கோபுரத்தையும் பஞ்ச ஆர்த்தியும் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு பாளையஞ்சாலை குமாரசுவாமி கோவிலில் நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மேலவாசல் முருகன் கோவில், நெல்லையப்பர் கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில் முருகன் சன்னதிகளிலும் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications