பிக்பாஸ் அல்டிமேட்: புகைவிட்டு புகைச்சலை ஏற்படுத்திய நான்கு போட்டியாளர்கள்..இவர்களும் இப்படியா
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நான்கு போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
புகைப்பிடிக்கும் அறையில் நான்கு போட்டியாளர்கள் செய்த செயல் அனைவருக்கும் திகைப்பை கொடுத்திருக்கும் நிலையில் அதில் ஒரு பெண் போட்டியாளர் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறப்பு சலுகைகள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் எடுக்கப்படும் காட்சிகளை ஒரு மணி நேரமே விஜய் டிவியில் ஒளிபரப்பி வந்தனர். ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் அல்டிமேட் நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் போட்டியாளர்கள் செய்வதை ரசிகர்கள் பார்த்து கொள்ளலாம் என்று சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி இருந்தாலும், தொடர்ந்து பார்க்க முடியாத சூழ்நிலை பல ரசிகர்களுக்கு இருப்பதால் அதற்கும் ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடு வைக்கப்பட்டுள்ளது.

சிக்கிய காட்சிகள்
இதுவரைக்கும் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல செயல்கள் எடிட் செய்யப்பட்டு ஒரு சில முக்கியமான நிகழ்வுகள் மட்டுமே காட்டப்பட்டு வந்தன. இதனால் இந்த வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ளே நடப்பதை அப்படியே ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது சிக்கிய முக்கிய நிகழ்வுகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுவரைக்கும் பார்த்ததில்லையே
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இங்கே புகைபிடிக்கக் கூடாது என்று ஒரு அறை இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அந்த அறை எதற்காக இருக்கிறது என்று தெரியாமல்தான் இருந்தது. தற்போது அந்த அறைக்குள் நடந்த செயல்களைப் பார்த்ததும் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அட...இப்படித்தான் ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டிருக்கிறதா?? இதை எல்லாம் நம்மிடம் காட்டாமல் தான் இருந்து கொண்டிருந்தார்களா?? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவ்வளவு சலுகைகள் இங்கே இவர்களுக்கு கொடுக்கப் படுகிறதா என்பது பலருக்கு வியப்பாக இருந்து வருகிறது.
Recommended Video

அதிகரிக்கும் மீம்ஸ்கள்
புகைப்பிடிக்கும் அறைக்குள் நிரூப் மற்றும் அபிநய் புகை பிடித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு பின்புறமாக கண்ணாடியில் சாரிக் மற்றும் ஒரு பெண் போட்டியாளர் தெரிகின்றார். இதைப் பார்த்ததும் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களில் சமூக வலைத்தளத்தில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது ரசிகர்களாலும் அந்த போஸ்ட் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இன்னும் போகப் போக எவ்வளவு விஷயங்கள் தெரிய போகிறதோ என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கூறி வருகிறார்கள்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications