பிக்பாஸ் அல்டிமேட்: புகைவிட்டு புகைச்சலை ஏற்படுத்திய நான்கு போட்டியாளர்கள்..இவர்களும் இப்படியா
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நான்கு போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
புகைப்பிடிக்கும் அறையில் நான்கு போட்டியாளர்கள் செய்த செயல் அனைவருக்கும் திகைப்பை கொடுத்திருக்கும் நிலையில் அதில் ஒரு பெண் போட்டியாளர் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறப்பு சலுகைகள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் எடுக்கப்படும் காட்சிகளை ஒரு மணி நேரமே விஜய் டிவியில் ஒளிபரப்பி வந்தனர். ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் அல்டிமேட் நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் போட்டியாளர்கள் செய்வதை ரசிகர்கள் பார்த்து கொள்ளலாம் என்று சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி இருந்தாலும், தொடர்ந்து பார்க்க முடியாத சூழ்நிலை பல ரசிகர்களுக்கு இருப்பதால் அதற்கும் ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடு வைக்கப்பட்டுள்ளது.

சிக்கிய காட்சிகள்
இதுவரைக்கும் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல செயல்கள் எடிட் செய்யப்பட்டு ஒரு சில முக்கியமான நிகழ்வுகள் மட்டுமே காட்டப்பட்டு வந்தன. இதனால் இந்த வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ளே நடப்பதை அப்படியே ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது சிக்கிய முக்கிய நிகழ்வுகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுவரைக்கும் பார்த்ததில்லையே
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இங்கே புகைபிடிக்கக் கூடாது என்று ஒரு அறை இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அந்த அறை எதற்காக இருக்கிறது என்று தெரியாமல்தான் இருந்தது. தற்போது அந்த அறைக்குள் நடந்த செயல்களைப் பார்த்ததும் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அட...இப்படித்தான் ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டிருக்கிறதா?? இதை எல்லாம் நம்மிடம் காட்டாமல் தான் இருந்து கொண்டிருந்தார்களா?? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவ்வளவு சலுகைகள் இங்கே இவர்களுக்கு கொடுக்கப் படுகிறதா என்பது பலருக்கு வியப்பாக இருந்து வருகிறது.
Recommended Video

அதிகரிக்கும் மீம்ஸ்கள்
புகைப்பிடிக்கும் அறைக்குள் நிரூப் மற்றும் அபிநய் புகை பிடித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு பின்புறமாக கண்ணாடியில் சாரிக் மற்றும் ஒரு பெண் போட்டியாளர் தெரிகின்றார். இதைப் பார்த்ததும் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களில் சமூக வலைத்தளத்தில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது ரசிகர்களாலும் அந்த போஸ்ட் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இன்னும் போகப் போக எவ்வளவு விஷயங்கள் தெரிய போகிறதோ என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கூறி வருகிறார்கள்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications