தொடரும் கேள்விகள், சந்தேகங்கள், வதந்திகள்...பாவனியின் ஒரே பதில்.. இதை எதிர்பார்க்கலையே ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்கு அளவுக்கு அதிகமாக வரும் நெகட்டிவ் கருத்துக்களுக்கு பாவனி பதில் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பாவனி கொடுத்த பதிலை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

சின்னத்தம்பி சீரியலில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலமாக சின்னதிரை ரசிகர்களின் மனதில் கனவுக் கன்னியாகவும், கதாநாயகியாகவும் வலம் வந்த பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இளைஞர்களை கவர்ந்து விட்டார். எந்த அளவிற்கு இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தார்களோ அதே அளவிற்கு நெகட்டிவ் கருத்துக்களும் வந்த வண்ணமாகவே இருந்தது. பொதுவாக வாழ்க்கையில் அடிப்பட்டு, சில இடங்களில் மேலே வந்து விட துடித்துக்கொண்டிருக்கும் நபர்களில் ஒருவராக பாவனி ரெட்டியும் இருந்துவருகிறார்.

3வது இடத்தில் வெற்றி
இதுவரைக்கும் சீரியல்களில் கதாநாயகியாகவே பார்த்து வந்த பாவனி ரெட்டி சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருந்துவருகிறார். போட்டோஷூட் மூலமாக பல இளைஞர்களை தூங்கவிடாமல் பாடாய் படுத்தி எடுத்து வருபவர்களில் இவரும் ஒருவர். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் அதிகமான ஆதரவு இருந்து வருகிறது. அதனால் தான் இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருந்து மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றார்.இவருடைய மற்றொரு முகத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அனைவருக்கும் தெரிய வைத்தது.

கலங்க வைத்த கடந்தகால கதை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே இவருக்கு திருமணம் முடிந்து அவருடைய காதல் கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்கமுடியாத நினைவாக இருந்தாலும், அந்த கவலையில் இருந்து மீண்டு வந்து விட வேண்டும் என்றுதான் இவர் போட்டோசூட்டிலும் நடிப்பிலும் பிசியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கதை சொல்லும் டாஸ்க்கில் தன்னுடைய கடந்த கால கதையை சொல்லி அனைவருடைய மனதிலும் சோக கீதத்தை பாட விட்டு ஆரம்பத்தில் பரிதாப இடத்தை பிடித்து விட்டார்.

பாவனியின் பதில்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரிடம் ஆரம்பத்தில் அபிநய் நட்பை தாண்டி பேசி வருவதாகவும் அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் இவர் கூறி அங்கே பெரிய பிரச்சனை ஏற்பட்டு கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் அவரிடம் நேரடியாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இவரிடம் அதிகமாக பாசமாக இருந்துவந்தார். இதைப்பற்றி சமூக வலைத்தளத்தில் இவருக்கு எதிராக அதிகமான கருத்துக்கள் பரவி வந்தது. தற்போது இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் அதேபோலவே வந்து கொண்டிருக்கிறதாம். அதனால் என்னை சுற்றி பல கேள்விகள், சந்தேகங்கள், வதந்திகள், ஊகங்கள் எல்லாம் எழுந்து கொண்டு இருக்கிறது. அதற்கு என்னுடைய பதில் நான் கூச்சலிடுகிறேன் என்று இவர் புடவையில் இருக்கும் ஒரு அழகான புகைப்படத்தை பதிவிட்டு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் ஆறுதல் சொல்லி தைரியம் கொடுத்து வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications