பிக்பாஸில் தொடங்கியது டிக்கெட் பைனல்... அப்போ வாயாலயே வடை சுடுவாங்களே!!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர் டிக்கெட் பைனல் தொடங்கிவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதலிடத்திற்கு செல்லும் போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

இரண்டாவது கட்டத்தில் ஐந்தாவது சீசன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 5வது சீசனில் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் இந்தப் போட்டியில் 8 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் ரசிகர்கள் பலர் ராஜூவை டைட்டில் வின்னர் என்று கூறிக் கொண்டிருந்தாலும் கடைசி நேரத்தில் கூட மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். ஏற்கனவே எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கூறுவது போல மாற்றம் இருக்குமா??என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

யார் அந்த அதிர்ஷ்டசாலி
கடந்த வாரத்தில் இரண்டு எலிமினேஷன் இருந்தது போல இந்த வாரத்திலும் இரண்டு எலிமினேஷன் இருக்குமா??என்றும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் மட்டும் அல்லாமல் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டின் முதல் ப்ரமோவில் கிராண்ட் பைனல் தொடங்கிவிட்டது என்று பிக்பாஸ் கூறியிருக்கிறார். பைனல் லிஸ்ட் ஆக யார் முதலாவதாக சேவ் ஆவார்கள் என்று இன்றைய எபிசோடில் தெரிந்துவிடும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கூறி வருகின்றனர். யார் இந்த இடத்திற்கு செல்வதற்கு தகுதி இல்லை என்பதை காரணத்தை சொல்லி பிக்பாஸ் எப்போதும் போல கொளுத்திப் போட்டு விட்டது.

குறை சொல்லும் டாஸ்க்கா
டாஸ்க் என்றால் உடல் உழைப்பை காட்டுகிற மாதிரி இருக்க கூடாதா என்று ரசிகர்கள் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த மாதிரி குறை கூற சொன்னால் பலர் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டு இருப்பார்கள். அதனால் அடுத்தவர்களின் திறமை தெரியாது என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். என்னதான் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடியிருந்தாலும் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறி கொண்டு சண்டை போடுவது தான் இந்த டாஸ்க்களிலும் இருக்குமா என்று பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

நிரூப்பின் பிளான்
வழக்கம்போல சண்டை போட்டு இங்க ஒரு கலவரம் உண்டு பண்ணனும் என்றால் நம்ம அந்த மாதிரி பண்ணலாம் என்று நிரூப் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இவருக்கு பக்கபலமாக போட்டியாளர்களும் சண்டை போடுவார்களா?? இல்லை சமரசமாக இவர்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்வார்கள?? என்று ரசிகர்களுக்கு கேள்விகள் எழுப்பி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் யாருடைய பெயரை அனைத்து போட்டியாளர்களும் சொல்லப் போகிறார்களோ என்ற ஆர்வமும் அனைவருக்கும் தோன்றியிருக்கிறது.












Click it and Unblock the Notifications