Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசு..துட்டு..மணி..மணி.. பணத்தை கூட்டும் பிக் பாஸ்...அலைபாயும் ஒருவரின் மனது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்த தருணம் தற்போது தொடங்கியிருக்கிறது.

நேரத்திற்கு நேரம் பணத்தின் மதிப்பைக் கூட்டி பிக்பாஸ் போட்டியாளர்களின்மனதை அலைபாய விட்டிருக்கிறது.

சூட்கேஸ் பெட்டியை தூக்கிக் கொண்டு போகும் போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.

பெட்டி வந்தாச்சு

பெட்டி வந்தாச்சு

ஏற்கனவே எல்லா சீசனிலும் தொடர்ந்து வரும் பணப்பெட்டி இந்த சீசனிலும் வந்திருக்கிறது. இதற்காகவே ஏற்கனவே போன வாரமே நிரூப் பேச தொடங்கிவிட்டார். அடுத்தவாரம் இந்த சம்பிரதாயம் நடக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டை பற்றி நன்றாக அலசி ஆராய்ந்து இதற்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் எடுத்துக் கொண்டுதான் இநத வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

தொகையை பற்றி தெரியுமா?

தொகையை பற்றி தெரியுமா?

இந்த வாரம் அமௌன்ட் வரும் அதை யாரும் எடுக்க மாட்டார்கள் என்று ஒரு பக்கமாக அமீர், பாவனிக்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். பணத்தை எடுத்துக்கொண்டு பாதியிலேயே பாவனி சென்று விடக்கூடாது என்று இந்த முன்னேற்பாடா என்று தெரியாவிட்டாலும் பாவனிக்கு அலர்ட் கொடுத்திருக்கிறார். ஐயாயிரம் ரூபாய் கிடைத்தது தனக்கு பெரிய விஷயம் என்று கொண்டாடி வந்த தாமரைச்செல்வி தற்போது சரத்குமார் கொண்டு வந்து கொடுத்த மூன்று லட்சத்தை ஏற்றுக்கொள்வாரா?? என்று ரசிகர்கள் மத்தியில் நேற்று இருந்தே கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் இதன் அமௌனட் எப்படியும் கூடும் என்பது போட்டியாளர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.

பணம் அதிகரித்துள்ளது

பணம் அதிகரித்துள்ளது

மூன்று லட்சத்தை பார்த்ததும் இவ்வளவுதானா என்று அனைவரும் கடுப்பாகி விட்டார்கள் போல, அதனால்தான் யாரும் அதை சீண்டவில்லை. ஆனால் நிரூப் மட்டும் எப்படியும் யாரையாவது மண்டையை கழுவி எடுக்க வைத்து விட வேண்டும் என்று முன்னேற்பாடாக ஒவ்வொருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். தற்போது இன்றைய 3 லட்சம் , 5 லட்சம் ஆகவும் பின்பு 7 லட்சம் ஆகவும் மாறி இருக்கிறது. இதை பார்த்ததும் பல போட்டியாளர்களுக்கு கண்கள் அந்த பணப் பெட்டியின் மேல் தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

பெட்டி யாருக்கு

பெட்டி யாருக்கு

தாமரைச்செல்வி எடுத்து செல்வார் என்று ஒரு சில ரசிகர்கள் அடித்துக் கூறி வருகின்றனர். ஆனால் அவருக்கு நன்றாக இந்த விளையாட்டை பற்றி தெரிந்து விட்டது. தான் எப்படியும் வந்து விடுவோம் என்று, அதனால் அவர் எடுக்க வாய்ப்பில்லை. நிரூப் தான் தனக்கு பைனல் செல்லும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இது கிடைத்தவரை லாபம் என்று முதலாவதாக எடுக்கப் போகிறார். ஆனால் எடுப்பார் என்று அடித்துக் கூறி வருகின்றனர். இந்த எபிசோடில் இதற்கான விடை கிடைத்துவிடும் என்று தற்போது ரசிகர்களின் மனக்குமுறல்கள் கமெண்டுகளில் பதிந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+