அசீம் செய்த செயலை சொல்லி கிழித்து தொங்கவிட்ட விக்ரமன்..இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தானாம்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 45 வது நாளில் இன்றும் பிக் பாஸ் நீதிமன்றம் டாஸ்க் நடந்து வருகிறது.
இந்த டாஸ்க் அசீம் மற்றும் ஏடிகே இடையே ஏற்பட்ட சாவி பிரச்சனை விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் ஏடிகே சார்பாக விக்ரமன் அசீமை கேள்வி கேட்டு வருகிறார்.

ஏ டி கே வின் தீர்ப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ரசிகர்கள் எதிர்பார்த்த பல திருப்பங்களோடு தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் சண்டை சச்சரவுகள் நடந்து வந்தாலும் தற்போதைய நீதிமன்ற டாஸ்க் ரசிகர்கள் பலரும் அதிகமாக எதிர்பார்த்து வந்த டாஸ்க் தான். ஏடிகே நேற்று எபிசோடில் நீதிபதியாக இருந்து விக்ரமன் மீது அமுதவாணன் வைத்த குற்றசாட்டுக்கு தீர்ப்பு சொல்லியிருந்தார். தன்னுடைய தீர்ப்பில் உறுதியாக இல்லாவிட்டாலும் கடைசியில் இரண்டு பக்கமும் சரிதான் என்று கூறி விக்ரமனை குற்றம் அற்றவர் என்று கூறி இருந்தார்.

மீண்டும் தொடங்கிய பழைய பஞ்சாயத்து
இந்த நிலையில் 45 ஆவது நாளாகிய இன்று அசீம் ஏடிகே இடையே அரசவை டாஸ்க் சாவி பிரச்சனை ஏற்பட்டதை குறித்து இன்று விசாரிக்கப்படுகிறது. அந்த டாஸ்க் ஏடிகேயால் கதிர் காலில் விலங்கு போட்டிருக்கும் சாவியை எடுத்து அசீம் மறைத்து வைத்திருந்தார். இதைக் குறித்து ஏடிகே மற்றும் அசீம் இடையே பெரும் பிரச்சனையும் சண்டையும் ஏற்பட்டு இருந்தது. அதில் ஏடிகே அசீமை பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டி இருந்தால் இதைக் குறித்து கமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஏடிகேயை திட்டி இருந்தார். தற்போது அதே பஞ்சாயத்து இன்று நடக்க இருக்கிறது.

விக்ரமனின் கேள்வி
நடந்து வரும் நீதிமன்ற டாஸ்க்கில் ஏடிகே. சார்பாக விக்ரமன் ஆஜராகி வாதாடுகிறார் .அதுபோல அசீமுக்கு ஆதரவாக ஷிவின் வழக்கறிஞராக நியமிக்கப்படுகிறார். சாவி எடுத்து வைத்தது என் சீக்ரெட் டாஸ்கின் ஸ்ட்ராட்டஜி தானே தவிர ஏடிகே மீது எனக்கு சுய கால் புணர்ச்சி கிடையாது என்று அசீம் தரப்பு நியாயத்தை ஷிவின் எடுத்துரைக்கிறார். அதற்கு விக்ரமன் சாவியை எடுத்து ஒளித்து வைப்பது என்ன ஸ்டேட்டர்ஸி ஒரு மனுஷன் காலில் விலங்கு போட்டு வைத்திருக்கிறது. ஒரு மனிதாபி மனத்தோடு நாம் நடந்து கொள்ள வேண்டும் காலில் இருக்கும் விலங்கை கழற்ற வேண்டும் யாரிடமாவது சாவியை எடுத்து வைத்திருந்தால் கொடுத்து விடுங்கள் என்று கேட்டாரா? இல்லையா? என விக்ரமன் கேட்கிறார்.

இந்த வாரம் வெளியேறுபவர்
விக்ரமன் கேள்விக்கு ஆமாம் நிச்சயமாக கேட்டார் என்று பதில் சொல்கிறார் அசீம், அப்படி கேட்கக்கூடிய நபர் அந்த சாவி வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்வாரா? என்று கேட்க இந்த ப்ரோமோ முடிந்து இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று சரியான சம்பவம் நடைபெறுகிறது என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வார ஓட்டுகளின் அடிப்படையில் ராம் கடைசி இடத்தில் இருக்கிறார். அவர்தான் இன்றைய டாஸ்கின் நீதிபதியாக இருக்கும் நிலையில் இவருடைய பெர்பார்மன்ஸ் சிறப்பாக இருந்தால் இவருக்கு ஓட்டுகள் இன்னும் அதிகமாக கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ராமை தொடர்ந்து அதற்கு அடுத்ததாக ராபர்ட் மாஸ்டர் இருக்கிறார். ஏற்கனவே ரட்சிதாவும் ராபர்ட் மாஸ்டர் சிறப்பாக விளையாடவில்லை என்றால் வெளியேறலாம் என்று கருத்து கூறியிருக்கும் நிலையில் இவர்கள் இருவரில் யார் வெளியேறுவார்கள் என்பது இந்த வார விளையாட்டு அடிப்படையில் தெரியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
-
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications