ஆறு பேர் கதைகள் ஒரு நாமினேஷன் யார் அந்த அதிர்ஷ்டசாலி... அடப்பாவிங்களா அதுக்கு இப்படியா பண்ணுவீங்க?
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் 11 வது நாள் தொடங்கி இருக்கிறது.
இன்றைய முதல் ப்ரோமோவில் மீதமிருக்கும் ஆறு போட்டியாளர்களுக்கு கதை சொல்லும் டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
இன்னும் ஒரு போட்டியாளர் மட்டுமே அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும் இந்த நிலையில் இன்னும் ஆறு போட்டியாளர்கள் கதை சொல்ல வேண்டியது இருக்கிறது.

வழக்கமான சம்பிரதாயம்
பிக் பாஸ் ஆறாவது சீசனில் தற்போது கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத கதைகளை சக போட்டியாளர்களிடம் கூறி அவர்கள் அந்த கதை கூறுவதற்கு வாய்ப்பு அளித்தால் தான் அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பிக் பாஸ் சலுகை கொடுத்து இருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இந்த கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

செம பிளான் தான்
கதை சொல்லும் டாஸ்க் பெரிய அளவில் இழுத்துக் கொண்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் போட்டியாளர்கள் ஒரு சிலரை மட்டும் டார்கெட் செய்து கதை சொல்ல விடாமல் தடுத்து அவர்களை அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற கூடாது என்று பிளான் செய்து பண்ணி செயல்பட்டு வருவதாக தெரிகிறது. மொத்தம் 21 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் பிக் பாஸ் அவர்களில் எட்டு பேரை மட்டும் தான் அடுத்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று கூறி இருக்கின்றது.

போட்டியாளர்களின் வில்லத்தனம்
இந்த நிலையில் இதுவரைக்கும் ஆறு போட்டியாளர்களின் கதைகள் முழுமையாக கேட்கப்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு போட்டியாளர்களின் கதைகள் மட்டும் தான் முழுமையாக கேட்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் இன்னும் கதை சொல்ல தொடங்காத போட்டியாளர்கள் ஆறு பேர் இருக்கின்றனர் .இதனால் இந்த ஆறு பேரில் யார் அந்த இரண்டு போட்டியாளர்கள் என்று போட்டி போட்டு கதைகளை கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் சக போட்டியாளர்கள் இவர்களை விடக்கூடாது என்று வேற லெவலில் யோசித்து கதை சொல்வதற்கு தொடங்குவதற்கு முன்பே பட்டனை அழுத்தி அவர்களை வெளியேற்றி வருகிறார்கள்.

அந்த இருவர் யார்
இன்றைய ப்ரோமோவில் முதலில் சாந்தி மாஸ்டர் தன்னுடைய அம்மாவை குறித்து பேசுகிறார். ஆனால் அந்த கதையை கேட்க விடாமல் போட்டியாளர்கள் பட்டனை டக்கு டக்குவென்று அழுத்தி விடுகிறார்கள். அவரை தொடர்ந்து ரட்சிதா அவரை தொடர்ந்து விக்ரம் என போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் கதை சொல்ல முடியாமல் தடுப்பதில் தான் குறியாக இருக்கின்றனர். இதனால் கடைசி இரண்டு போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications