விக்ரமன் செய்த "அந்த” செயலை வெளியே காட்டவில்லை.. எதிர்பார்க்காத குற்றச்சாட்டுகளை வைத்த ஆயிஷா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விட்டு கடந்த வாரம் ஆயிஷா வெளியேறிய நிலையில் அந்த நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தது என்பதை பற்றி பேசி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பல விஷயங்கள் வெளியே காட்டப்படுவதில்லை என்று பல போட்டியாளர்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிஷா இப்போது அடுக்கடுக்காக பல உண்மைகளை கூறியிருக்கிறார்.

அசீமோடு ஏற்பட்ட சண்டை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகையான ஆயிஷா ஒரு போட்டியாளராக அறிமுகமான முதல் நாளில் இருந்து சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்து வந்தார். ஆரம்பத்தில் தன்னுடைய விளையாட்டை விளையாடுகிறேன் என இவர் விளையாட இவரை எதிர்த்து அசீம் இவரோடு சண்டையிட்ட போது இவர் கடந்த முதல் சீசனில் கலந்து கொண்டிருந்த ஓவியாவை போலவே இவரும் நடந்து கொள்வதாக பலர் கருத்து தெரிவித்தனர். அசீம் மற்றும் ஆயிஷா இடையே ஏற்பட்ட சண்டை சச்சரவு பார்த்து பலரும் ஆயிஷாவுக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்து கொண்டு இருந்தனர்.

எழுந்த எதிர்ப்பு
அது மட்டுமல்லாமல் ஆயிஷா, கமல் இடம் என்னை தப்பாக வெளியே போர்ட்ரைட் செய்து விடாதீர்கள் சார் என்று ஆயிஷா கூறிய அந்த வார்த்தையை கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரை பிரபலங்களும் கூட அதிர்ச்சி அடைந்தனர். கமல் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் எவ்வளவு பெரிய ஒரு நடிகர், திறமைசாலி அவரை இப்படி பொதுவெளி தளத்தில் என்னை வெளியே போர்ட்ரைட் செய்து காட்டி விடாதீர்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று இவருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

உருவான ஆதரவுகள்
ஆனாலும் அதற்குப் பிறகு நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய விளையாட்டை நல்ல முறையிலே ஆயிஷா எடுத்து சென்று கொண்டிருந்தார். ஒரு சில வாரங்கள் ஆயிஷா விளையாட்டில் ஈடுபடாமல் தனியாக இருந்தாலும் அடுத்த வாரம் இவர் விளையாட்டில் பெர்பார்மன்ஸ் செய்து விடுகிறார். இவர் இப்படித்தான் என்று கணிக்க முடியாத லெவலில் இருந்த நிலையில் கடந்த வாரம் இவருடைய பெயர் நாமினேஷனில் இருந்த நிலையில் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருந்ததால் இவர் வெளியேறுவார் என்று அனைவருக்கும் தெரிந்தாலும் இவருடைய வெளியேற்றம் சரியானது அல்ல என்று இவருக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

கைதட்டிய விக்ரமன்
ஆனால் அதே நேரத்தில் ஆயிஷாவின் பெயரை கமல் எடுத்துக்காட்டியதும் அதை முதலில் பார்த்த விக்ரமன் அவரை அறியாமல் கைதட்டி விட்டாராம். ஆனால் அதை குறித்து தான் கேட்டதற்கு நான் ஜனனி சேவ் ஆனதற்காக கைத்தட்டினேன் என்று கூறிக் கொண்டிருந்தார் என்று வருத்தத்தோடு ஆயிஷா பேசியிருக்கிறார். அன்றைய பிரமோவில் கூட ஆயிஷா விக்ரமனை பார்த்து புரியுது விக்ரமம் என்று சொன்னதை காட்டி இருப்பார்கள். அது மட்டும் அல்லாமல் அதே நாளில் இரவு மணிகண்டன், விக்ரமன் கைதட்டியதற்கு ஆயிஷா புரிகிறது என்று முகத்துக்கு நிகராகவே திட்டிவிட்டாள் என்று மைனாவிடம் கூறி கிண்டல் படித்துக் கொண்டிருந்தார்.

ஆயிஷாவின் குற்றச்சாட்டு
ஆனால் விக்ரமன் ஆயிஷா வெளியே செல்லும்போது கூட கேட்ட அருகில் வந்து நின்றும் நான் நீங்கள் வெளியே செல்வதற்காக கைதட்டவில்லை ஜனனி சேவ் ஆகிவிட்டால் என்ற நினைப்பு தான் கைத்தட்டி விட்டேன் என்று புரிய வைக்கும் போது அப்போதும் ஆயிஷா கண்டு கொள்ளாத மாதிரியே நடந்து கொண்டார் ஓகே ப்ரோ விடுங்க என்று கூறியிருந்தால் இத்தநிலையில் அந்த நேரத்தில் விக்ரமன் கைதட்டி சந்தோஷப்பட்டதை வெளியில் காட்டாமல் மறைத்து விட்டார்கள் என்று தற்போது ஆயிஷா குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications