பிக்பாஸ் அல்டிமேட்: அது என்ன பார்வை..அபிநயை வாட்டி எடுத்த தாமரை.. தலையை குனிய வைத்து விட்டாரே
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநய் மற்றும் தாமரை செல்வியின் திடீர் சண்டை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பார்ப்பதற்கு எல்லாம் சண்டையைத் தொடங்கிய போட்டியாளர்களால் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்களாம்.

அதிகரிக்கும் சண்டைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி வேற லெவல் என்று சொல்லும் அளவிற்கு தினமும் சண்டை காட்சிகள் விதவிதமாக அரங்கேறி வருகிறது. நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்று சொல்வது போலத்தான் தற்போது இங்கே நடந்து வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். எதற்கெடுத்தாலும் சண்டை போட்டால் தான் ப்ரோமோவில் வர முடியும் என்று போட்டியாளர்கள் தெரிந்து வைத்துக் கொண்டு இப்படி செய்கிறார்களா என்று எண்ண தோன்றுகிறது
என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அபிநயிடம் வம்பு இழுத்த தாமரை
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வந்தாலும் அதற்கு தினமும் மூன்று ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்று 3-வது நாளான இன்று மூன்றாவது ப்ரோமோவில் தாமரைச்செல்வி மற்றும் அபிநய் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை தொடங்கி இருக்கிறது. தாமரைச்செல்வி தற்போது நடந்து கொண்டிருக்கும் செய்தியாளர்கள் மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொள்ளும் டாஸ்க்கில் சுருதி இடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஓரமாக அமர்ந்திருந்த அபிநய் பார்வை சரியில்லை என்று தாமரை சண்டையை தொடங்கி இருக்கிறார்.

காரசாரமான வாக்குவாதம்
முழிக்காதீங்க என்ன முழிக்கீங்க, எதுக்கு இப்படி முழிக்கிரீங்க... நான் அங்க பேசிக்கிட்டு இருக்கும்போது நீங்க இப்படி இப்படி முழிச்சா அதுக்கு என்ன அர்த்தம் என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு அபிநய் நீங்க எதற்கு என்னை பார்க்கிறீங்க! !?? உங்க கேள்வி அங்க இருக்கும்போது உங்க பார்வையும் அங்கே தானே இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு தாமரைச்செல்வி நீங்க முழிக்கும் போதே தெரியுது நீங்க ஆக்சன் வைக்கிறீங்க என்று கூறியிருக்கிறார்.
Recommended Video

தலை குனிந்து விட்டாரே
தாமரை செல்வியின் பேச்சைக் கேட்டதும் கடுப்பான அபிநய் என்ன தெரிகிறது என்று கேட்டிருக்கிறார். அதனால் இப்போ என்ன என்றும் கேள்வியை துவக்கி இருக்கிறார். அதற்கு தாமரைச்செல்வி அண்ணே.. நான் இப்போ சண்டை போடனும் என்று கேள்வி கேட்கவில்லை என்று சொல்லவும், அபிநய் நீங்கதானே இப்போ சண்டை மூட்டி விடுறீங்க என்று கூறியிருக்கிறார். அதற்கு தாமரை நான் மூட்டி எல்லாம் விடல அண்ணே... பார்க்கிறவங்க பார்வை வைச்சி புரிஞ்சிக்க முடியாத அளவிற்கு முட்டாள் நான் கிடையாது என்று கூறியிருக்கிறார். அதற்கு அபிநய் உடனடியாக எனக்கும் தெரியும், நீங்க அந்த அளவிறகு முட்டாள் இல்லை என்று எனக் கூறியிருக்கிறார். உனக்கும் சுருதிக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையில் நான் என்ன பண்ண போகிறேன் என்று குரலை உயர்த்தி அபிநய் பேசியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. தாமரைச்செல்வி என்ன சொல்ல என்று தெரியாமல் தலையை குனிந்து உள்ளார்.












Click it and Unblock the Notifications